முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆடிப்பூர உற்சவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2025 11:07
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆடிப்பூர உற்சவ விழா நடந்தது. இதையொட்டி நேற்று மாலை 6:00 மணிக்கு மீனாட்சி, செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்கள் வழங்கிய வளையல்களைக் கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைத்து பெண் பக்தர்களுக்கும் வளையல் பிரசாதமாக வழங்கப்பட்டது. வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலிலும் ஆடிப்பூர விழா கொண்டாடப்பட்டது. அம்மனுக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.