Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முறையூர் மீனாட்சி சொக்கநாதர் ... சந்தன காப்பு அலங்காரத்தில் இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் அருள்பாலிப்பு சந்தன காப்பு அலங்காரத்தில் இரும்பை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடப்புரத்தில் ஆகம விதிகள் மீறல், அறநிலையத்துறை மீது பக்தர்கள் புகார்
எழுத்தின் அளவு:
மடப்புரத்தில் ஆகம விதிகள் மீறல், அறநிலையத்துறை மீது பக்தர்கள் புகார்

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2025
11:07

திருப்புவனம்; மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயிலில் பாலாலயம் நடத்தி சேதமடைந்த சிலைகளை சரி செய்த நிலையில் பரிகார பூஜை நடத்தாமல் இருப்பது பக்தர்களை வேதனையடைய செய்துள்ளது.


பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடி மாதத்தில் பன்மடங்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். மடப்புரம் காளி அருகே உள்ள பூதகணங்கள், கன்னிகையர் குதிரை சிலைகள் உள்ளிட்டவைகள் சேதமடைந்திருந்தன. அவற்றை உபயதாரர்கள் நிதி உதவியுடன் சரி செய்ய கடந்த மார்ச் 12ம் தேதி பாலாலய விழா நடத்தி, பின்பு சரி செய்யும் பணி நடந்து முடிந்தது. பொதுவாக கோயில்களில் சிற்பங்கள், சாமி சிலைகள் உள்ளிட்டவைகள் சேதமடைந்திருந்தால் அவற்றை சரி செய்த பின் சிறப்பு பூஜை நடத்தி புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். இது ஆகம விதி, ஆனால் மடப்புரத்தில் சிலைகளை சரி செய்து முடித்த பிறகு சிறப்பு பூஜைகள் நடத்தப்படவில்லை. மடப்புரம் காளி ஆக்ரோஷமான தெய்வம், எனவே அம்மனை சாந்தப்படுத்த எலுமிச்சம்பழம் மாலை அணிவிக்கப்படுகிறது. ஆக்ரோஷமான தெய்வத்தின் சிலைகளை சரி செய்த போது அதனை சாந்தப்படுத்த பூஜைகள் செய்திருக்க வேண்டும், அதனை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியப்படுத்தி விட்டனர். ஆடி மாத உண்டியல் வசூலை கருத்தில் கொண்டு எந்த வித பரிகார பூஜையும் செய்யாததால், தான் மடப்புரத்தில் தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இனிமேலாவது அதிகாரிகள் பரிகார பூஜை செய்து அம்மனை சாந்தப்படுத்த வேண்டும், மடப்புரம் கோயிலை ஒட்டி கோசாலையில் உயிர்ப்பலி நிகழ்ந்தும் இன்று வரை பரிகார பூஜையையும் அதிகாரிகள் நடத்தவே இல்லை. இது பக்தர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி; சிருங்கேரியில் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானத்தின் 33வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவத்தில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் ஆடி மாத ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. பக்தி பரவசத்துடன் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, ஆர். எஸ். புரம் அன்னபூர்னேஸ்வரி கோவிலில் நாக பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar