புதுச்சேரி; இரும்பை, பாலா திரிபுரசுந்தரி அம்பாள் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். புதுச்சேரி – திண்டிவனம் பைபாஸ் சாலை, இரும்பை டோல்கேட் அருகே பாலா திரிபுர சுந்தரி அம் பாள் கோவிலில் நேற்று ஆடிப்பூர உற்சவம் நடந்தது. அதனையொட்டி, காலை பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. முக்கிய நிகழ்வாக, மாலை பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேர் உள்புறப்பாடு நடந்தது. இதில், பங்கேற்ற பக்தர்களுக்கு வளையல் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் டிரஸ்ட்டியினர் செய்திருந்தனர்.