சேலம்: சேலம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஏகாதசி விழாவுக்காக, லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. டிசம்பர் 24ம் தேதி, ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள் கோவில்களில், சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடக்கிறது. ஏகாதசி விழாவின் போது, சேலம், பட்டைகோவில் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டாள் திருப்பாவை நண்பர்கள் குழு சார்பில், பக்தர்களுக்கு லட்டு வழங்கப்பட உள்ளது. அதற்காக, 50 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.