Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கள்ளக்குறிச்சி வாராஹி அம்மன் ... சின்னவேடம்பட்டி கவுமார மடாலயத்தில் நாண்மங்கல விழா சின்னவேடம்பட்டி கவுமார மடாலயத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விவசாயம் சிறக்க தாய் தெய்வ வழிபாடு; வண்ணாத்தங்கரை கல்வெட்டில் தகவல்
எழுத்தின் அளவு:
விவசாயம் சிறக்க தாய் தெய்வ வழிபாடு; வண்ணாத்தங்கரை கல்வெட்டில் தகவல்

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2025
03:07

திருப்பூர்; அவிநாசி அருகே புதுப்பாளையம் கிராமத்தில், 18 மற்றும் 19ம் நுாற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் கண்டறியப்பட்டது.


திருப்பூர் மாவட்டம், அவிநாசி புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் கொடுத்த தகவலின்படி, திருப்பூர் வீர ராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் மற்றும் பொன்னுச்சாமி ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.


இதுகுறித்து ரவிக்குமார் கூறியாவது: புதுப்பாளையம் பொன் அழகுநாச்சியம்மன் கோவில் அருகே, நிலத்தில் புதைந்த நிலையில் கண்டறியப்பட்ட கல்வெட்டு, கி.பி.1803-ல் பொறிக்கப்பட்டதை அறிய முடிகிறது. 55 செ.மீ. அகலமும், 135 செ.மீ. உயரமும் கொண்ட இக்கல்வெட்டில் 16 வரிகளில் தமிழ் எழுத்துகள் உள்ளன. கி.பி.1803ம் ஆண்டு தமிழ் ருத்ரிரோற்காரி ஆண்டு கார்த்திகை மாதம் 19ம் தேதி, ஸ்ரீஅப்பாச்சிராயர், ராயராக இருந்த சுப நாளில் புதுப்பாளையம் மணியம், வெங்கிடசுப்பையன், சிவகிரிப்பிள்ளை, பொன்தட்டான், அழகப்பகவுண்டன் ஆகியோர் கூடி, அழகு நாச்சியம்மனுக்கு, இரண்டு வள்ளம் காடு மானியமாக அளித்த செய்தியை நாம் அறிய முடிகிறது. நடுவயக்காடு தோட்டத்தில், 30 செ.மீ. அகலமும் 60 செ.மீ. உயரமும் கொண்ட, கல்வெட்டில், சந்திரன் -சூரியன் முத்திரை, தர்மசக்கரத்தின் மையத்தில் சூலத்துடன், மற்றும் பூ மாலையுடனும் கூடிய மூன்று வரிக்கல்வெட்டு எழுத்துக்கள் முழுமை பெறாத நிலையில் உள்ளது. குடிகிணற்றுத் தோட்டத்தில், பண்டைய தமிழ் மக்கள் வழிபட்ட கன்னிமார், தாய் தெய்வச் சிற்பம் ஒன்று 125 செ.மீ. அகலத்திலும், 45 செ.மீ. உயரத்திலும் காணப்படுகிறது. வலது காலைத் தொங்கவிட்டு, இடது காலை மடித்துச் சுக ஆசனத்தில் அமர்ந்தபடி, இடது கையை இடது தொடைமேல் வைத்து, வலது கையில் மலர்ச் செண்டு ஏந்தி அருள் பாலிக்கும், கன்னிமார் சிற்பத்தில், கி.பி.19ம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று வரித் தமிழ்க் கல்வெட்டு காணப்படுகிறது. ‘துன்மதி ஆண்டு மார்கழி 24ம் தேதி, பல்லடம் தாலுகா, காமநாயக்கன்பாளையத்திலிருக்கும் (காப்பாளையத்திலிருக்கும்) பெரியண்ண கவுண்டர் மகன் கருமான்டக்கவுண்டன் இதைச் செய்து வைத்துள்ளதை நாம் அறிய முடிகிறது. இதன்வாயிலாக, இடைக்கற்காலம் முதல் இன்று வரை புதுப்பாளையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளும், பல நுாறு ஆண்டுகளாக மக்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் வேளாண்மை வளமைக்காக, தாய் தெய்வத்தைப் போற்றி வழிபட்டதை நாம் அறிய முடிகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar