முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் செல்லிஅம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு கணபதி ஹோமம்,சிறப்பு யாகசாலை பூஜை, பூர்ணாஹுதி நடந்தது.பின்பு செல்லியம்மனுக்கு கங்கையிலிருந்து எடுத்துவரப்பட்ட புனித நீர்,பால்,சந்தனம்,மஞ்சள் உட்பட 21 பொருட்களால் அபிஷேகம்,தீபாரதனை நடந்தது.முதுகுளத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் ஊர்காப்பு கட்டப்பட்டது.கொடி மரத்திற்கு கொடியேற்றப்பட்டது.பால்குடம், அக்னிசட்டி, பூக்குழி,வேல் குத்தும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. இன்று 2008 விளக்குபூஜை, ஆக.4ல் வளையல் அலங்காரம், ஆக.6ல் அக்னிசிட்டி ஊர்வலம், ஆக.7ல் பால்குடம் ஊர்வலம், சிம்மவாகனத்தில் அம்மன் வீதி உலா, ஆக.8ல் வேல் குத்தி பூக்குழி, இறங்குதல்,பூப்பல்லாக்கில் அம்மன் வீதி உலா,ஆக.9ல் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கங்கையில் கரைத்தல் நடைபெற உள்ளது.விழாவில் முதுகுளத்தூர், தூரி,செல்வநாயகபுரம் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.