Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேலூர் கோவில்களில் ஆடி வெள்ளி ... வஞ்சி அம்மனுக்கு 15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் வஞ்சி அம்மனுக்கு 15 லட்சம் ரூபாய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் கண்டெய்னர் லாரிகளில் வீதி உலா வந்த 63 நாயன்மார்கள்
எழுத்தின் அளவு:
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் கண்டெய்னர் லாரிகளில் வீதி உலா வந்த 63 நாயன்மார்கள்

பதிவு செய்த நாள்

01 ஆக
2025
12:08

திருவாரூர்; பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில்  ஆடி சுவாதியை முன்னிட்டு 63 நாயன்மார்கள் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் பரவை நாச்சியார் திருக்கல்யாண வீதி உலாவை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 


சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் சர்வ தோஷ தலமாகவும் விளங்கும் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சைவ சமய குறவர்கள் நால்வருள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் கைலாயம் சென்ற ஆடி சுவாதி திருநாளில் முதல் நிகழ்வாக சுந்தரமூர்த்தி நாயனார் பறவை நாச்சியார் திருக்கல்யாணம் தியாகராஜ சுவாமி கோவிலில் உள்ள கமலாம்பாள் சன்னதியில் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று இரவு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இருந்து அதிபத்தர், அப்பூதியடிகள், சுந்தரமூர்த்தி நாயனார், திருஞான சம்பந்த மூர்த்தி, திருநாவுக்கரசர், கண்ணப்பர், காரைக்கால் அம்மையார், திருமூலர் நமிநந்தியடிகள் போன்ற 63 நாயன்மார்களின் வீதி உலா காட்சி நடைபெற்றது. இதில் இரண்டு கண்டெய்னர் லாரிகளில் 63 நாயன்மார்கள் அலங்காரம் சேய்விக்கப்பட்டு வைக்கப்பட்டு வீதி உலா நடைபெற்றது. அதற்கு முன்பாக சுந்தரமூர்த்தி நாயனார் பரவை நாச்சியார் திருக்கல்யாண கோலத்தில் எழுத்தருளி வீதி உலா சென்று அருள் பாலித்தனர்.


இந்த வீதி உலா காட்சி தேரோடும் வீதிகளான கீழவீதி மேல வீதி தெற்கு வீதி வடக்கு வீதி என நான்கு விதிகளும் வலம் வந்த பின்பு கோவிலை சென்றடைந்தது.இதில் பத்துக்கும் மேற்பட்ட நாதஸ்வர இசைக்கலைஞர்கள் பங்கு பெற்று மங்கள இசை இசைக் வீதி உலா நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மேலும் நாயன்மார்கள் வீதி உலாவின் போது தேவாரம் திருவாசகம் போன்றவற்றில் இடம்பெற்ற பாடல்களை பாடியபடி சிவனடியார்கள் பங்கு பெற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar