பதிவு செய்த நாள்
03
ஆக
2025
04:08
தொண்டாமுத்தூர்; பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், ஆடிப்பெருக்கையொட்டி ஏராளமான மக்கள் குவிந்து வழிபாடு செய்தனர்.
ஆடிப்பெருக்கையொட்டி, பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், அதிகாலை முதலே பொதுமக்கள் குவிய துவங்கினர். படித்துறை படிக்கட்டில், தலைவாழை விரித்து, அதில், ஏழு கூலாங்கற்களை சப்த கன்னிமார்களாக பாவித்து, மிட்டாய், முறுக்கு போன்ற பலகாரங்கள், பழ வகைகள், தேங்காய் பூ வைத்து படையிலிட்டு, கற்பூரம் ஏற்றி, தெய்வங்களையும், பித்ருக்களையும் வழிபட்டனர். புதியதாக திருமணமான தம்பதிகள், சுமங்கலி பெண்கள், தெய்வங்களை வழிபட்டு, புதிய தாலி சாரடுகளை மாற்றி, பழைய தாலி சாரடுகளை ஆற்றில் விட்டனர். தொடர்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு, அன்னதானம் வழங்கினர். அதேபோல, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள ஆறு, குளம், வாய்க்கால் ஆகிய நீர் நிலைகளிலும், ஆடிப்பெருக்குயொட்டி, பொதுமக்கள், படையலிட்டு வழிபாடு செய்தனர்.