Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி வெள்ளி, வரலட்சுமி விரதம்; ... வடமதுரை கோயில் விழாவில் தலையில் தேங்காய் உடைத்து சாட்டையடி பெற்ற பக்தர்கள் வடமதுரை கோயில் விழாவில் தலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற முதல் தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற முதல் தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

08 ஆக
2025
11:08

சேலம்;  பிரசித்தி பெற்ற சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா முன்னிட்டு முதன்முதலாக தேரோட்ட வைபவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


ஆடி மாதம் என்றாலே சேலம் மாவட்டத்தில் அம்மனுக்கு உகந்த மாதம் 8 பேட்டைக்கும் நாயகியாக விளங்கக்கூடிய சேலத்து மகாராணி கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் பூச்சாட்டுகளுடன் தொடங்கியது சக்தி அளித்தல் அக்னி கரகம் பூங்கரகம் அழகு குத்துதல் உள்ளிட்ட சிறப்பு வைபவங்கள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பொங்கல் வைத்தல் ஆடு கோழி பலியிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர் 


கோட்டை மாரியம்மன் ஆடி திருவிழாவை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் திருவீதி உலா கடந்த சில வருடங்களாகவே பல்லக்கில் வைத்து ஊர்வலம் நடைபெற்றது. இதனை அடுத்து பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க  தேரில் நகர் வலம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்த ஆண்டு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோட்டை மாரியம்மன் கோவில் தேர் செய்யப்பட்டு கடந்த மாதம்  வெள்ளோட்டம் நடைபெற்றது. இந்நிலையில் சேலம் கோட்டை மாரியம்மனுக்கு முதன் முதலாக தேரோட்டம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னதாக மூலவர் மற்றும் உற்சவமூர்த்திக்கு பால் இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தி தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு உற்சவமூர்த்தியான கோட்டை அம்மனை அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள செய்தனர். தொடர்ந்து வேதங்கள் முழங்க மந்திரங்கள் அர்ச்சனைகள் நடைபெற்றன. பின்னர் திருத்தேரில் எழுந்தருளியுள்ள கோட்டை மாரியம்மன் க்கு மகாதீபார தனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. அப்போது பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சேலத்து மகாராணி கோட்டை மாரியே நமோ நமக என விண்ணை முட்டும் அளவிற்கு கோஷங்கள் எழுப்பினர். இந்த தேரானது முதல் அக்ரஹாரம், இரண்டாவது அக்ரஹாரம், சின்ன கடைவீதி வழியாக வந்து கோவில் வளாகத்தில் நிறைவடைந்தது. கோவிலின் முன்பு தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது.


முன்னதாக தேரோட்டத்தின் போது பம்பை வாத்தியம், செண்டை மேளம், நாதஸ்வரம்இசைக்கப்பட்டன. பெண்கள் நாட்டிய நிகழ்ச்சிகளும் கோலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நடனங்களுடன் முன் செல்ல கோட்டை மாரியம்மன் தேர் வலம் வந்தது. திருத்தேரை அப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நின்றிருந்த தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar