Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீடுகளில் வரலட்சுமி விரத பூஜை குங்கும காப்பு அலங்காரத்தில் திரிபுரசுந்தரி அம்பாள் அருள்பாலிப்பு குங்கும காப்பு அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடி தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடி தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

09 ஆக
2025
12:08

மதுரை; அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.  நாராயணா கோஷம் விண்ணை முட்ட பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆடி, அசைந்து வந்தது.


அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா ஆக. 1ம் தேதி காலை தங்கக் கொடிமரத்தில் கருடாழ்வார் கொடி ஏற்றப்பட்டு துவங்கியது. தொடர்ந்து, ஆக. 5ல் சிவகங்கை சமஸ்தானம் மறவர் மண்டபத்திற்கு கள்ளழகர் தங்கப் பல்லக்கில் எழுந்தருளினார். ஆக. 8ல் தங்கக் குதிரை வாகனத்தில் வலம் வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்ட நிகழ்வில், இன்று காலை 8.40 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், சுந்தரராச பெருமாள் தேவியர்களுடன் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து காலை 9 மணிக்குத் திருத்தேர் வடங்களைப் பிடித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்துச் சென்றனர்.


மேலும் பக்தர்கள் மேளதாள இசையுடன் சந்தனக் குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்தும், கிடாய் வெட்டியும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவு செய்தனர். இந்த திருவிழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மேற்பார்வையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அழகர்மலை நூபுர கங்கை ராக்காயி அம்மன், ஆறாவது படைவீடு சோலைமலை முருகன், மூலவர் கள்ளழகர் பெருமாள், மற்றும் பதினெட்டாம் படி கருப்பணசுவாமி ஆகிய கோவில்களில் நீண்ட வரிசையில் சென்று நெய் விளக்குகள் ஏற்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த தேர்த் திருவிழாவைக் காண மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும், கேரளா போன்ற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்களுக்கு மேல் வந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


18ம்படி கருப்பணசுவாமி சன்னதி திறப்பு; 


அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதி கதவுகள் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதபவுர்ணமி தினத்தன்றுமட்டும் மாலை திறக்கப்பட்டு, 18 படிகளுக்கும் படிப்பூஜை செய்து தீபாராதனை காட்டப்படும். பின் கதவுகளுக்கு சந்தனம் சாத்தும் நிகழ்வு நடைபெறும். இந்தாண்டு இன்று ஆக. 9 மாலை அந்நிகழ்வு நடக்கிறது.  கிராமங்களில் இருந்து 2 நாட்கள் முன்பே பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டிகளில் வந்து கோயில் வளாகத்தில் தங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர்.ஆக. 10ல் உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுப்பி; உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தரிசனம் தரிசனம் செய்தார். தொடர்ந்து ... மேலும்
 
temple news
மும்பை; காஞ்சி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை மும்பையில் உள்ள ஸ்ரீ ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் திருகார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் நேற்று (நவ.,27) மாலை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ... மேலும்
 
temple news
அவிநாசி; மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக முஸ்லிம்கள் இணைந்து சேவூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar