Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி ஏழுமலையானுக்கு இரண்டு ... திருவேங்கிடபுரம் பொன்னியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா விமரிசை திருவேங்கிடபுரம் பொன்னியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தசரா யானைகளுக்கு உடல் எடை சரிபார்ப்பு; அம்பாரி அபிமன்யுவை விட பீமா பலசாலி
எழுத்தின் அளவு:
தசரா யானைகளுக்கு உடல் எடை சரிபார்ப்பு; அம்பாரி அபிமன்யுவை விட பீமா பலசாலி

பதிவு செய்த நாள்

12 ஆக
2025
12:08

மைசூரு; மைசூரு தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க முதல்கட்டமாக வந்துள்ள ஒன்பது யானைகளுக்கு, நேற்று உடல் எடை கணக்கிடப்பட்டது. அம்பாரியை சுமக்கும் அபிமன்யுவை விட பீமா யானை பலசாலி என்பது தெரிய வந்துள்ளது.


உலகப் புகழ் பெற்ற மைசூரு தசரா அடுத்த மாதம் 22ம் தேதி துவங்கி, அக்டோபர் 2ம் தேதி வரை 12 நாட்கள் நடக்க உள்ளது. தசராவின் கடைசி நாளில் ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும். மைசூரு அரண்மனை வளாகத்தில் இருந்து 750 கிலோ எடை கொண்ட, சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் தங்க அம்பாரியை சுமந்தபடி ஒரு யானை செல்ல, மற்ற யானைகள் பின் தொடர்ந்து செல்லும். அம்பாரி சுமக்கும் அபிமன்யு தலைமையில், எட்டு யானைகள் கடந்த 4ம் தேதி வனப்பகுதியில் இருந்து, மைசூரு அசோகபுரத்தில் உள்ள வன பவனுக்கு முதல்கட்டமாக அழைத்து வரப்பட்டன. நேற்று முன்தினம் வன பவனில் இருந்து, மைசூரு அரண்மனைக்கு முறைப்படி அழைத்துச் செல்லப்பட்டன. நடைபயிற்சி நேற்று காலை ஒன்பது யானைகளுக்கும் உடல் எடை சரிபார்க்கப்பட்டது. மைசூரு டவுன் சாயாஜிராவ் ரோட்டில் உள்ள, லாரி பாரம் சரிபார்க்கும் எடைமேடைக்கு ஒன்பது யானைகளும், அரண்மனையில் இருந்து நடைபயணமாக அழைத்துச் செல்லப்பட்டன.


யானைகளுக்கு உடல் எடை சரிபார்க்கப்பட்ட பின், வன அதிகாரி பிரபுகவுடா அளித்த பேட்டி: தசராவில் பங்கேற்க வந்துள்ள ஒன்பது யானைகளுக்கும், உடல் எடை சரிபார்க்கப்பட்டது. ஒன்பது யானைகளும் ஆரோக்கியமாக உள்ளன. கடந்த முறை தசராவில் பங்கேற்றுவிட்டு வனத்திற்கு அனுப்பியபோது, என்ன எடை இருந்ததோ அதே எடையில் யானைகள் உள்ளன. யானைகளின் உடல்நிலை, ஆரோக்கியத்தை அறிய எடை கணக்கிடப்பட்டுள்ளது. வரும் நாட்களில் யானைகளுக்கு என்ன மாதிரியான உணவு, புரதங்கள் வழங்க வேண்டும் என்பது பற்றி, கால்நடை மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்துவோம். அம்பாரியை சுமக்கும் அபிமன்யுவை விட, பீமா யானை உடல் எடை அதிகமாக உள்ளது. நேற்று முதல் யானைகளுக்கு நடைப்பயிற்சி ஆரம்பமாகி உள்ளது. காலையில் இரண்டு மணி நேரம் 10 கி.மீ., மற்றும் மாலையில் இரண்டு மணி நேரம் 10 கி.மீ., என, ஒரு நாளைக்கு 20 கி.மீ., நடைப்பயிற்சி அளிக்கப்படும். யானைகள் காலில் ஆணி உள்ளிட்ட இரும்புத் துண்டுகள் குத்திவிடக் கூடாது என்பதால், யானைகள் நடைப்பயிற்சி செல்லும் இடத்தில் காந்தம் பொருத்திய ஜீப் வழக்கம்போல் செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூரில் புரட்டாசி மூன்றாவது வார சனிக்கிழமை முன்னிட்டு 250ஆண்டுகள் பழமை வாய்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar