Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தசரா யானைகளுக்கு உடல் எடை ... சிவாஜிநகர் ஓம் சக்தி கோவில் ஆடிப்பூரம் திருவிழா 15ல் துவக்கம் சிவாஜிநகர் ஓம் சக்தி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவேங்கிடபுரம் பொன்னியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா விமரிசை
எழுத்தின் அளவு:
திருவேங்கிடபுரம் பொன்னியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா விமரிசை

பதிவு செய்த நாள்

12 ஆக
2025
12:08

பொன்னேரி; திருவேங்கிடபுரம், பொன்னியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.


பொன்னேரி அருகில் உள்ள திருவேங்கிடபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொன்னியம்மன்கோவிலில், 46ம் ஆண்டு ஆடித்திருவிழா, கடந்த, 8ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, கரகம் புறப்படுதல், கூழ்வார்த்தல் விமரிசையாக நடந்தது. பகல், 2:00 மணிக்கு பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து, வழிபட்டனர். மாலை, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபஆராதனைகள் நடந்தன. இரவு, வாணவேடிக்கைகளுடன் அம்மன் திருவீதி உலா நடந்தது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன், கிராமம் முழுதும் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருத்தணி திருத்தணி பெரிய தெருவில் உள்ள தணிகை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று ஜாத்திரை விழா நடக்கிறது. விழாவை ஓட்டி நேற்று காலை, 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன.


தொடர்ந்து கோவில் வளாகத்தில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று ஜாத்திரை விழா மாலை, 4:00 மணிக்கு பூ கரகம் பைபாஸ் சாலையில் இருந்து ஊர்வலமாக தணிகை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்திற்கு வந்தடையும். இரவு, 7:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூ கரகத்துடன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதே போல் திருத்தணி மேட்டுத்தெரு எல்லையம்மன், அக்கைய்யாநாயுடு சாலை தணிகாசலம்மன், எம்.ஜி.ஆர்., நகர் எல்லையம்மன், பெரியார் நகர் அம்மன், சுப்பிரமணிய நகர் துர்க்கையம்மன், காந்தி நகரில் உள்ள துர்க்கையம்மன். ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள சக்தி அம்மன் மற்றும் புறவழிச்சாலையில் உள்ள, ஆதிபராசக்தி அம்மன் உள்பட திருத்தணி நகராட்சியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களில் இன்று ஜாத்திரை விழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி: காரை அங்காள பரமேஸ்வரி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.செஞ்சி அடுத்த காரை கிராமத்தில் புதிதாக ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ரிஷபேஷ்வரர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் சன்னதி கலசத்திற்கு ... மேலும்
 
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar