Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி ஆடிக்கிருத்திகை கோலாகல கொண்டாட்டம் ஆடிக்கிருத்திகை கோலாகல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வல்லக்கோட்டை, திருப்போரூரில் ஆடி கிருத்திகை விழா விமரிசை
எழுத்தின் அளவு:
வல்லக்கோட்டை, திருப்போரூரில் ஆடி கிருத்திகை விழா விமரிசை

பதிவு செய்த நாள்

17 ஆக
2025
12:08

ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வல்லக்கோட்டை கிராமத்தில், 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. 7 அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். கடந்த ஜூலை மாதம், கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது.


ஆடி மாதத்தில் வந்த இரண்டாவது கிருத்திகை விழாவை முன்னிட்டு, நேற்று காலை, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


திருப்போரூர்: திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. நேற்று ஆடி கிருத்திகை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, அதிகாலை 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின், சிறப்பு அர்ச்சனைகளும், தீபாராதனைகளும் நடந்தன. விழாவில், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள், காவடி எடுத்தும், அலகு குத்தியும், முடிகாணிக்கை செலுத்தியும் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.


இரவு 7:00 மணியளவில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கந்தபெருமானின் வீதியுலா மாடவீதிகளில் நடந்தது.


* சித்தாமூர் அருகே பெருக்கரணை கிராமத்தில் நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோவில் உள்ளது. நேற்று ஆடிகிருத்திகையை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் உள்ள 45 அடி உயர முருகன் சிலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வீதி உலா வந்து, மரகத தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பால், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்ட 27 வகை அபிஷேக பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மூலவருக்கு தீபாஆராதனை நடந்தது. இதில் சித்தாமூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பாலை: மதுரை திருப்பாலை இஸ்கான் அமைப்பு சார்பில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஆடி கிருத்திகையான நேற்று, வாலிபாளையம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு அலங்கார ... மேலும்
 
temple news
கோவை கொடிசியா வளாகம் அருகில் இஸ்கான் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா, கோலாகலமாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்கம் சார்பில், ஆர்.எஸ்.புரத்தில் ராதா கல்யாண மஹோத்ஸவம், பக்தர்கள் சூழ ... மேலும்
 
temple news
போத்தனூர்: சுந்தராபுரம் பெருமாள் கோயில் வளாகத்திலுள்ள, மாரியம்மன் கோவில் தேவர் சமூக மண்டபத்தில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar