Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் ... திருவாலங்காடு கோவிலில் தண்டு மாரியம்மன் ஐம்பொன் சிலை திருட்டு திருவாலங்காடு கோவிலில் தண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்பை சங்கீத உற்ஸவ பொன்விழா பாலக்காடு அருகே துவக்கம்
எழுத்தின் அளவு:
செம்பை சங்கீத உற்ஸவ பொன்விழா பாலக்காடு அருகே துவக்கம்

பதிவு செய்த நாள்

18 ஆக
2025
11:08

பாலக்காடு; ‘‘காலமும் வரலாறும் இருக்கும் வரை, செம்பை வைத்தியநாத பாகவதரின் இனிமையான குரல் எதிரொலிக்கும் என்றும், அந்த இசையின் சமகால பொருத்தத்தைப் பரப்புவதே இந்தப் பொன் விழா கொண்டாட்டத்தின் நோக்கம்,’’ என, கேரள தேவஸ்தான அமைச்சர் வாசவன் தெரிவித்தார்.


கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில், ஆண்டு தோறும், ஏகாதசி உற் ஸவம் நடக்கிறது. இதையொட்டி, செம்பை சங்கீத உற்ஸவத்தின் பொன்வி ழா கொண்டாட்ட துவக்க விழா, நேற்று பாலக்காடு மாவட்டம், செம்பை கிராமத்தில் நடந்தது. 


விழாவை, தேவஸ்தான அமைச்சர் வாசவன் துவக்கி வைத்து பேசியதாவது: காலமும் வரலாறும் இருக்கும் வரை, செம்பை வைத்தியநாத பாகவதரின் இனிமையான குரல் எதிரொலிக்கும். அந்த இசையின் சமகால பொருத்தத்தைப் பரப்புவதே, இந்தப் பொன் விழா கொண்டாட்டத்தின் நோக்கமாகும். பாகவதர், ஜாதி அல்லது நிற வேறுபாடு இல்லாமல் செயல்பட்டு, ஒரு முன்மாதிரியாக அமைந்து, சமூக முன்னேற்றத்திற்கான ஒரு வழிமுறையாக, கலையின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டார். இசைக்கான ஒரு பண்பாட்டை உருவாக்க பாடுபட்ட பாகவதர், கேரளத்தின் இசைப் பண்பாட்டை வடிவமைத்தார். தனக்கு பின்னால் பல சீடர்களை வளர்க்கவும் அவர் கடுமையாக உழைத்தார். இவ்வாறு, அமைச்சர் பேசினார்.


கோயில் தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தரூர் தொகுதி எம்.எல்.ஏ., சுமோத் பங்கேற்றார். விழாவில், பிரபல கவிஞரும், எழுத்தாளருமான ஆலங்கோடு லீலா கிருஷ்ணன், செம்பை வைத்தியநாத பாகவதரின் நினைவுரையாற்றினார். குருவாயூர் கோயில் நிர்வாகி அருண்குமார், கோயில் நிர்வாக உறுப்பினர்களான மனோஜ், மல்லிச்சேரி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு, விஸ்வநாதன், தினேசன், செம்பை சுரேஷ், சுப்பராமன், கீழத்தூர் முருகன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் பொன்விழாவின் ‘லோகோ’வை அமைச்சர் வாசவன், குருவாயூர் கோயில் நிர்வாகி அருண்குமாருக்கு வழங்கி வெளியிட்டார். பொன்விழா நினைவு தபால் தலை மற்றும் தபால் கவர் ஆகியவை வெளியிடல் நிகழ்வும் நடந்தது. ‘செம்பை சங்கீதமும் வாழ்க்கையும்’ என்ற வாழ்க்கை வரலாற்று நூலின் பொன்விழா பதிப்பை எம்.எல்.ஏ., சுமோத், செம்பை சுரேஷிற்கு வழங்கினார். தொடர்ந்து பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்., கிருஷ்ணாவின் இசைக்கச்சேரி நடந்தது. அவருக்கு திருவனந்தபுரம் சம்பத், ஹரி நாராயணன், திருவனந்தபுரம் ராஜேஷ் ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். பொன்விழாவின் தொடர் நிகழ்ச்சிகள் மாநிலத்தில் பல மையங்களில் நடத்திய பின், குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் நிறைவு பெறுகின்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar