Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ... ஆவணி அமாவாசை; பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் திதி கொடுத்து வழிபாடு ஆவணி அமாவாசை; பேரூர் நொய்யல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளம் கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேக முகூர்த்தகால் நடல்
எழுத்தின் அளவு:
பெரியகுளம் கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேக முகூர்த்தகால் நடல்

பதிவு செய்த நாள்

21 ஆக
2025
05:08

பெரியகுளம்: கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலமாக நடந்தது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார்.


பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் மலைமேல் கைலாசநாதர் கோயில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. கோயிலில் கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரர் மற்றும் விநாயகர், பாலசுப்பிரமணியர் உட்பட ஏராளமான பரிவார தெய்வங்கள் உள்ளன. இக்கோயில் தென் மாவட்டத்தின் திருவண்ணாமலை என அழைக்கப்படுகிறது. பிரதோஷம், பவுர்ணமி பூஜைகள், கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கும்பாபிஷேகம்: கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் திருப்பணிகள் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கிறது. ஆக., 29 ல் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முகூர்ந்தக்கால் நடும் விழா முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. அர்ச்சகர் ராஜா பட்டர் மற்றும் அர்ச்சகர்கள் குழுவினர் கோயிலில் பூஜைகள் செய்தனர். செயல் அலுவலர் சுந்தரி, தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், முன்னாள் கவுன்சிலர் ராஜகோபால் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு ஆலோசகர் ஜெயபிரதீப், தலைவர் நாராயணன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி மற்றும் ஆன்மிக பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar