பெரியகுளம் கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேக முகூர்த்தகால் நடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2025 05:08
பெரியகுளம்: கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலமாக நடந்தது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார்.
பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் மலைமேல் கைலாசநாதர் கோயில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. கோயிலில் கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரர் மற்றும் விநாயகர், பாலசுப்பிரமணியர் உட்பட ஏராளமான பரிவார தெய்வங்கள் உள்ளன. இக்கோயில் தென் மாவட்டத்தின் திருவண்ணாமலை என அழைக்கப்படுகிறது. பிரதோஷம், பவுர்ணமி பூஜைகள், கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கும்பாபிஷேகம்: கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் திருப்பணிகள் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கிறது. ஆக., 29 ல் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முகூர்ந்தக்கால் நடும் விழா முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. அர்ச்சகர் ராஜா பட்டர் மற்றும் அர்ச்சகர்கள் குழுவினர் கோயிலில் பூஜைகள் செய்தனர். செயல் அலுவலர் சுந்தரி, தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், முன்னாள் கவுன்சிலர் ராஜகோபால் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு ஆலோசகர் ஜெயபிரதீப், தலைவர் நாராயணன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி மற்றும் ஆன்மிக பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.