விழுப்புரம் விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலில சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2025 05:08
விழுப்புரம்; விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலில், அமாவாசை சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழுப்புரம், சண்முகபுரம் காலனி விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு இன்று காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.