கீழப்புலியூர் பச்சையம்மன் கோவில் தேர் திருவிழா; தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2025 01:08
பெரம்பலூர்; கீழப்புலியூர் கிராமத்தில் உள்ள பச்சையம்மன் கோவில், ஆவணி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கீழப்புலியூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாத திருத்தேர் திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம், இந்த ஆண்டு ஆவணி மாத திருத்தேர் திருவிழா கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி பூச்செறிதல் விழா மற்றும் 14ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும், சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்கு பின் திருவீதி விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வில் ஒன்றான தீமிதி திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.