Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று ஹரிதாள, விபத்ரா கவுரி விரதம்; ... 1,008 கலச அபிஷேகத்துடன் வல்லக்கோட்டை முருகன் கோவிலில் பூஜை 1,008 கலச அபிஷேகத்துடன் வல்லக்கோட்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் நிலங்களின் விபரங்களை அனுப்ப டி.ஐ.ஜி.,களுக்கு பதிவுத்துறை தலைவர் உத்தரவு
எழுத்தின் அளவு:
கோயில் நிலங்களின் விபரங்களை அனுப்ப டி.ஐ.ஜி.,களுக்கு பதிவுத்துறை தலைவர் உத்தரவு

பதிவு செய்த நாள்

25 ஆக
2025
10:08

சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் குறித்த விபரங்களை பட்டியலாக அனுப்ப வேண்டும் என, பதிவுத்துறை மண்டல டி.ஐ.ஜி.,க்களுக்கு, அந்த துறையின் தலைவரான, ஐ.ஜி., தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கடிதம் எழுதி உள்ளார்.


கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை, தனியார் சிலர் அபகரிப்பதாக புகார்கள் எழுந்தன. அவற்றை பாதுகாக்கவும், அதுதொடர்பான பத்திரப்பதிவுகளை தடுக்கவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஹிந்து சமய அறநிலையத்துறை கோரிக்கை அடிப்படையில், கோவில் நிலங்களுக்கான சர்வே எண்களுக்கு, வழிகாட்டி மதிப்புகளை நீக்க பதிவுத்துறை நடவடிக்கை எடுத்தது. எனினும் சில இடங்களில், கோவில் நிலங்கள், நீக்கப்படாத வழிகாட்டி மதிப்புகளை பயன்படுத்தி, பத்திரப்பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வக்ப் வாரியத்திடம் இருந்து கடிதம் வந்ததாகக் கூறி, சில இடங்களில் சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்ய மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், பொதுமக்கள் தங்கள் நிலங்களை விற்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும், இனாம் முறை ஒழிப்பின் போது, பட்டா வழங்கப்பட்டதாக கூறி, சிலர் கோவில் நிலங்களை, தங்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்ய முயற்சித்து வருகின்றனர். இந்த நிலங்கள் விஷயத்தில், உண்மை நிலவரம் தெரியாமல் முடிவு எடுத்தால் குழப்பம் ஏற்படும். எனவே, இனாம் ஒழிப்பு காலத்தில் வழங்கப்பட்ட பட்டா; கோவில் நிலம் என ஹிந்து சமய அறநிலையத்துறை அளித்த கடிதங்கள்; தனியார் பெயரில் பத்திரப்பதிவை நிறுத்தக்கோரி வக்பு வாரியம் அளித்த கடிதம் போன்றவற்றின் விபரங்களை, சார் - பதிவாளர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்களிடம் இருந்து பெற வேண்டும். அவற்றை பட்டியலாக தயார் செய்து, தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று ஹரிதாள கவுரி விரதம். கவுரி விரதம் இருப்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவர். இன்று சிவ சக்தியை ... மேலும்
 
temple news
சிவகங்கை; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிட்டுக்கு மண் சுமந்த ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் திருக்கூடல்மலை ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், 48 நாள் நடந்த மண்டல பூஜை, 1,008 கலச அபிஷேகத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் ஆவணி இரண்டாவது சோம வாரர  திங்கட்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar