அரிச்சந்திரன் கோவிலில் சங்காபிஷேகம் கணபதி ஹோமத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2025 01:08
புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் கணபதி ஹோமத்துடன் நேற்று துவங்கியது. புதுச்சேரி, கருவடிக்குப்பம் இடுகாட்டில் அமைந்துள்ள சந்திரமதி தாயார் உடனுரை அரிச்சந்திர சுவாமி கோவிலில் இன்று 24ம் தேதி காலை 9:30 மணிக்கு பரிகார தோஷங்கள் தீர்க்கும் மயான காளிக்கு கலசாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இதற்கான பூஜை நேற்று மாலை 6:00 மணிக்கு புண்ணியாதனம் ஹோமம், கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
தொடர்ந்து நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், ருத்திர ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, அரிச்சந்திரன், சந்திரமதி, யோகிதாஸ் நித்திய பூஜை, இரவு 8:00 மணிக்கு மகா பைரவர் மற்றும் பைரவிக்கு வடுக பூஜை நடந்தது. இன்று 24ம் தேதி காலை 7:00 மணிக்கு கோ பூஜை, பஞ்சபூத பூஜை, மகா ஏகதச ருத்ர ஹோமம், ஸ்ரீமகா காளிக்கு மகா காளி ஹோமம், 9:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து காலை 10:00 மணிக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் தோஷங்கள் தீர்க்கும் பரிகார மயான காளிக்கு கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய பரி பாலகர் ரவி, நிர்வாகிகள் ஸ்ரீநிவாசன், தினேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.