பாகூர்; மதிக்கிருஷ்ணாபுரம் பட்டாபிராமர் சுவாமி கோவில், புனர்பூசம் நட்சத்திரத்தையொட்டி, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. புதுச்சேரி – கடலுார் சாலை, மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர், லட்சுமணன், சீதாபிராட்டி சமேத பட்டாபிராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ராமர் பிறந்த நட்சத்திரமான, புனர்பூசம் நட்சத்திரத்தையொட்டி, நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. இதனையொட்டி, காலை 9:00 மணிக்கு, பால், தயிர், தேன், சந்தனம், பன்னீர, இளநீர் உள்ளிட்டவற்றால் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கபட்டு பக்தர்களுக்கு பிரசாத ம் வழங்கப்பட்டது. மாலை 6.00 மணியளவில், உற்சவமூர்த்தி உள்புறப்பாடு நடந்தது. இரவு 8:00 மணிக்கு, சுவாமி சிறப்பு அலங்காரத்தில், ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சின்னசாமி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.