பதிவு செய்த நாள்
22
டிச
2012
11:12
காரிமங்கலம்: காரிமங்கலம் லட்சுமி நாராயண ஸ்வாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் 24ம் தேதி நடக்கிறது.காரிமங்கலம் கடைவீதி, அக்ரஹாரம் லட்சுமி நாராயண ஸ்வாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும், 24ம் தேதி அதிகாலை, 3.30 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்கிறது.மாலை, 6 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலாவும், 25ம் தேதி துவாதசி சிறப்பு பூஜையும் நடக்கிறது. விழா கட்டளைதாரர்கள் டாக்டர் பன்னகசைனம் குடும்பத்தினர் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்குகின்றனர்.ஏற்பாடுகளை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் மோகன்குமார், பிரகாஷ், மற்றும் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.* தர்மபுரி கோட்டை வரலட்சுமி சமேத பரவாசுதேவர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை, 3.30 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு பூஜையும், அலங்காரமும், அபிஷேகமும், 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தின் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.* காவேரிப்பட்டணம் தேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவில், காரிமங்கலம் பிக்கன்அள்ளி சென்னகேசவ பெருமாள் கோவில், கோவிலூர் சென்னகேசவ பெருமாள் கோவில், பழைய தர்மபுரி சென்னகேசவ பெருமாள் கோவில், மணியம்பாடி வெங்கட்ரமண ஸ்வாமி கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், திருவீதி உலா, சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது.