Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ... சீர்காழி மகா திரிசூல வராகி, ராஜ குபேர சாய் பாபா கோவில் கும்பாபிஷேகம் சீர்காழி மகா திரிசூல வராகி, ராஜ குபேர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொக்கூர் கைலாசநாதர் கோயிலில் 200 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
கொக்கூர் கைலாசநாதர் கோயிலில் 200 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

28 ஆக
2025
12:08

மயிலாடுதுறை, கொக்கூர் கைலாசநாதர் கோயிலில் 200 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கொக்கூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி சமேத கைலாசநாதர் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயில் 200 வருடங்களாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடந்தது. இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கிராம மக்களின் பங்களிப்புடன் சிதிலமடைந்த கோயில் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு திருப்பணி நடைபெற்றது. திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா கடந்த 24-ஆம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. கும்பாபிஷேக தினமான இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவில், பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் இசைக்க கோயிலை சுற்றி வந்து விமானத்தை அடைந்தது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி, விமான கலசங்களில் புனித நீரூற்ற மகா கும்பாபிஷேகம் 200 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் மூலவர் மற்றும் பரிவாரா மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். விநாயகரை வழிபடுவதற்குரிய முக்கியமான நாள் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று  நம்பெருமாள் சிவப்பு நிற ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar