மடப்புரம் காளி கோயிலில் ஞாயிறு, பௌர்ணமி பூஜை ரத்து!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2025 10:09
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் ஞாயிற்றுகிழமை மாலை நடைபெற உள்ள பௌர்ணமி பூஜை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. வரும் ஞாயிறு 7ம் தேதி இரவு 9:57 மணிக்கு சந்திரகிரகணம் தொடங்கி நள்ளிரவு 1:26 மணி வரை நீடிக்கிறது. மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் மதியம் 1:00 மணிக்கு உச்சி கால பூஜை நடைபெறுவதால், பூஜை நடந்த பின் மதியம் 1:30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. ஞாயிறு அன்று மாலை நடைபெற உள்ள அபிஷேகம், பௌர்ணமி பூஜையும் ரத்து செய்யப்படுகிறது. எனவே பக்தர்கள் ஞாயிறு அன்று நடை சாத்தப்படுவதால் எந்த வித பூஜையும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு நாள் 8ம் தேதி திங்கட்கிழமை வழக்கம் போல பூஜைகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.