Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிருங்கேரி சுவாமிகள் ஆராதனை விழா கோவில் குளத்தை சீரமைக்க தொழுவூர் மக்கள் வலியுறுத்தல் கோவில் குளத்தை சீரமைக்க தொழுவூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாலங்காடு கோவிலில் கடைகள் அமைத்து அட்டூழியம்
எழுத்தின் அளவு:
திருவாலங்காடு கோவிலில் கடைகள் அமைத்து அட்டூழியம்

பதிவு செய்த நாள்

14 செப்
2025
12:09

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடப்படாததால், கோவில் நுழைவாயிலில் 20க்கும் மேற்பட்ட வெளிநபர்கள் கடையமைத்து வியாபாரம் செய்கின்றனர். இவர்கள், கோவிலுக்கு வருவோரைபொருட்களை வாங்க வற்புறுத்துவதால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது.


இக்கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, அரசு விடுமுறை, வார விடுமுறை நாட்கள் மற்றும் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் மாந்தீஸ்வரர் பூஜை ஆகிய நாட்களில் பக்தர்கள் அதிகளவில் வருவர். பக்தர்களின் வசதிக்காக, கோவில் வளாகத்தில் பூ, பழம், கற்பூரம் விற்பனை செய்ய இரண்டு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.


கடந்த ஜூன் மாதம் வரை கடை நடத்தி வந்தனர். ஏலம் முடிந்ததால், மறு ஏலம் எடுக்கும் வரை கடை மூடப்பட்டது. இதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி கொண்ட உள்ளூர் வியாபாரிகள், பூ, பழம், காய்கறிகள், கோரைப்புல், கற்பூரம் என, ஆளுக்கொரு கடை அமைத்துள்ளனர். மேலும், தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களை பக்தர்கள் கட்டாயம் வாங்க வேண்டும் என, வற்புறுத்தி வருகின்றனர். வாங்காமல் செல்வோரை தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர். இதனால், கோவிலுக்கு மன நிம்மதி தேடி வரும் பக்தர்கள் விரக்தியுடன் செல்கின்றனர்.


எனவே, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை, வடாரண்யேஸ்வரர் கோவில் நுழைவாயிலில் இருந்து அகற்ற, அறநிலைய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar