Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சிருங்கேரி சுவாமிகள் ஆராதனை விழா கோவில் குளத்தை சீரமைக்க தொழுவூர் மக்கள் வலியுறுத்தல் கோவில் குளத்தை சீரமைக்க தொழுவூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாலங்காடு கோவிலில் கடைகள் அமைத்து அட்டூழியம்
எழுத்தின் அளவு:
திருவாலங்காடு கோவிலில் கடைகள் அமைத்து அட்டூழியம்

பதிவு செய்த நாள்

14 செப்
2025
12:09

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடப்படாததால், கோவில் நுழைவாயிலில் 20க்கும் மேற்பட்ட வெளிநபர்கள் கடையமைத்து வியாபாரம் செய்கின்றனர். இவர்கள், கோவிலுக்கு வருவோரைபொருட்களை வாங்க வற்புறுத்துவதால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது.


இக்கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, அரசு விடுமுறை, வார விடுமுறை நாட்கள் மற்றும் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் மாந்தீஸ்வரர் பூஜை ஆகிய நாட்களில் பக்தர்கள் அதிகளவில் வருவர். பக்தர்களின் வசதிக்காக, கோவில் வளாகத்தில் பூ, பழம், கற்பூரம் விற்பனை செய்ய இரண்டு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.


கடந்த ஜூன் மாதம் வரை கடை நடத்தி வந்தனர். ஏலம் முடிந்ததால், மறு ஏலம் எடுக்கும் வரை கடை மூடப்பட்டது. இதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி கொண்ட உள்ளூர் வியாபாரிகள், பூ, பழம், காய்கறிகள், கோரைப்புல், கற்பூரம் என, ஆளுக்கொரு கடை அமைத்துள்ளனர். மேலும், தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களை பக்தர்கள் கட்டாயம் வாங்க வேண்டும் என, வற்புறுத்தி வருகின்றனர். வாங்காமல் செல்வோரை தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர். இதனால், கோவிலுக்கு மன நிம்மதி தேடி வரும் பக்தர்கள் விரக்தியுடன் செல்கின்றனர்.


எனவே, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை, வடாரண்யேஸ்வரர் கோவில் நுழைவாயிலில் இருந்து அகற்ற, அறநிலைய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்பு, சேவை, தியாகம், மனிதநேயம்... இந்தச் சொற்கள் அனைத்தும் ஒன்றாகக் கலந்த உருவமே பகவான் ஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: ‘‘இறைவனுடைய அருள் நமக்கு கவசமாக இருந்து காப்பாற்ற, கந்த சஷ்டி கவசம் முதற்கொண்டு அனைத்து ... மேலும்
 
temple news
பல்லடம் அடுத்த, அய்யம்பாளையம் கிராமத்தில், வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. சர்ப்ப தோஷம் காரணமாக ... மேலும்
 
temple news

தேய்பிறை சஷ்டி செப்டம்பர் 14,2025

கன்னிவாடி: தருமத்துப்பட்டி அருகே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news

தேய்பிறை பஞ்சமி பூஜை செப்டம்பர் 14,2025

சாணார்பட்டி: கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி அம்மனுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar