Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதவப்பாக்கம் ஆதிலிங்கேஸ்வரர் ... பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் ஆண்டு விழா பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செவிலிமேடு ராமானுஜர் கோவிலை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
செவிலிமேடு ராமானுஜர் கோவிலை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

15 செப்
2025
01:09

காஞ்சிபுரம்; செவிலிமேடு ராமானுஜர் கோவில் சுவரில் செடிகள் வளர்ந்துஉள்ளதால், சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சிபுரம் செவிலிமேடு, சாலை கிணறு ராமானுஜர் கோவில், காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ராமானுஜர் கோவிலில் நடைபெறும் அனுஷ்டான குளம் உத்சவத்தின்போது, வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் வேடுவர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ராமானுஜர் அவதரித்த திருவாதிரை திருநட்சத்திரைத்தையொட்டி மாதந்தோறும் திருவாதிரையன்று சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. பல்வேறு சிறப்பு பெற்ற ராமானுஜர் கோவில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எனவே, இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து இக்கோவிலை புதுப்பிக்க ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முடிவு செய்தனர். இந்நிலையில், கோவில் சுவரில் அரச மர செடிகள் வளர்ந்து விரிசல் ஏற்பட்டு வருவதால், நாளடைவில் கட்டடம் முற்றிலும் வலுவிழக்கும் நிலை உள்ளது. எனவே, செவிலிமேடு ராமானுஜர் கோவிலை சீரமைக்கும் திருப்பணியை விரைந்து துவக்க, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 


இதுகுறித்து, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் செயல் உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான ராஜலட்சுமி கூறியதாவது: செவிலிமேடு ராமானுஜர் கோவிலை புனரமைக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், டெண்டர் விடப்பட்டு கோவிலில் திருப்பணி துவக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar