Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி தேர்த்திருவிழா அனந்தபுஷ்கரணி குளக்கரைக்கு சிமென்ட் கல் சாலை அனந்தபுஷ்கரணி குளக்கரைக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வையாவூர் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
வையாவூர் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

05 அக்
2025
03:10

புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.


மதுராந்தகம் அருகே திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பிரசன்ன வெங்கடேச பெருமாள் காட்சியளித்தார்.


கூவத்துார் அடுத்த, முகையூர் பகுதியில், சுந்தரவல்லி தாயார் சமேத கள்ளழக பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இப்பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதி பக்தர்கள், இதை வடதிருமாலிருஞ்சோலை கோவிலாக கருதி வழிபடுகின்றனர்.


கள்ளழகர், சித்திரை மாத பவுர்ணமி நாளில், பாலாற்றில் இறங்குவது, புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையன்று கருடசேவையாற்றுவது என, முக்கிய உத்சவங்கள் காண்கிறார்.


புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையான நேற்று காலை, கள்ளழகர் சிறப்பு அபிஷேக திருமஞ்சன வழிபாட்டைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவையாற்றி, பக்தி பாடல்கள், மேள, தாள இசையுடன் வீதியுலா சென்றார். புதுச்சேரி சாலை, கிராம வீதிகள் வழியே சென்ற அவரை, பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.


திருப்போரூர் அடுத்த மேட்டுத்தண்டலம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், காலை 10:30 மணிக்கு, விசேஷ திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், மஹா தீபாரதனை நடந்தது.


நெல்லிக்குப்பம் அம்புஜவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில் அதிகாலை, 5:30 மணிக்கு, சிறப்பு பூஜை நடந்தது.


அகரம் கிராமத்தில் பாமா ருக்குமணி சமேதகோபாலகிருஷ்ண பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


மானாமதி ஊராட்சியில் அடங்கிய அகரம் வைகுண்ட பெருமாள் கோவில், சிறுதாவூர், திருப்போரூர், கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar