பதிவு செய்த நாள்
26
டிச
2012
05:12
சபரிமலை: திருப்பதி போல சபரிமலையிலும், தரிசனத்துக்கு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என, திருவிதாங்கூர் தேவஸ்தான ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்தான ஊழியர்கள் சங்கத்தின் தலைவர், பைஜு, சபரிமலையில் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலையில் பக்தர்களுக்கான, வசதிகளை இன்னும் மேம்படுத்த வேண்டும். திருப்பதி, திருமலையில் இருப்பது போன்ற வசதிகளை, இங்கும் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான், பக்தர்கள் நல்ல முறையில் சாமி தரிசனம் செய்ய முடியும்.சபரிமலையில், வசதிகளை மேம்படுத்த, பக்தர்களிடம் இருந்து, கட்டணம் வசூலிக்க வேண்டும். இதுதொடர்பாக, ஒருமித்த கருத்தை ஏற்படுத்த தேவஸ்தானம் முற்பட வேண்டும். சபரிமலை வரும் பக்தர்களுக்கு, பல தனியார் அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அன்னதானம் வழங்குகின்றன; இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. எனவே, வரும் ஆண்டுகளில், அன்னதானம் வழங்குவதிலிருந்து, தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், தனியார் அமைப்புகளையும் முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும். தேவஸ்தானமே முழுநேரமும் அன்னதானம் வழங்க வேண்டும். இவ்வாறு பைஜு கூறினார்.