பதிவு செய்த நாள்
26
டிச
2012
05:12
சபரிமலை: சபரிமலையில், இன்று மண்டல பூஜை நடக்கிறது. சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, நடைபெறும் பூஜைக்குப் பின், இரவு நடை அடைக்கப்படும்.சபரிமலை அய்யப்பன் கோவிலில், நவம்பர், 16ம் தேதி மண்டல உற்சவம் துவங்கியது. அன்று முதல், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சபரிமலை வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மண்டல உற்சவத்தின் நிறைவாக, இன்று மதியம், 12:30 மணிக்கு, மூலவரான அய்யப்பனுக்கு மண்டல பூஜை நடக்கிறது.இந்த பூஜையின் போது, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள தங்க அங்கி, அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும். மண்டல பூஜை முடிந்ததும், இரவு, 10:00 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.மகர ஜோதி உற்சவத்திற்காக, வரும், 30ம் தேதி கோவில் நடை திறக்கப்படும். மண்டல உற்சவம் முடிந்து, நான்கு நாட்கள் கோவில் நடை மூடப்பட்டிருக்கும் போது, சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.