Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் ... கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜை  கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீமுஷ்ணம் கோவிலுக்குள் மழைநீர்: பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
ஸ்ரீமுஷ்ணம் கோவிலுக்குள் மழைநீர்: பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

06 அக்
2025
05:10

ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்து உள்பிரகாரம் சேறும் சகதியுமானதால், பக்தர்கள் அவதியடைந்தனர்.


கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்தி பெற்ற பூவராகசுவாமி கோவில் உள்ளது. தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், கடை வீதி மற்றும் கழிவு நீர் கால்வாய்களில் இருந்து அதிகளவு மழை நீர்  வெளியேறியது. இந்த மழை நீர் பூவராக சுவாமி கோவிலின் முன்புறம் உள்ள பிரதான வாயில் வழியாக கோவிலுக்குள் புகுந்தது. இதனால், பக்தர்கள் அவதியடைந்தனர். மழை காலங்களில் கோவிலின் முன்பகுதியில் அமைக்கப்பட்ட வடிகால் மூலம் மழை நீர் வடிந்து கோவிலுக்குள் செல்லாமல் இருக்கும். கோவிலுக்குள் தேங்கும் மழைநீர் கோவிலின் வடக்கு பகுதியில் உள்ள வடிகால் மூலம் வெளியேறிவிடும். ஆனால், நேற்று பெய்த கன மழை காரணமாக அதிகளவில் தண்ணீர் உள்ளே புகுந்து கோவில் வளாகத்தில் இருக்கும் குழந்தையம்மன் சன்னதி பகுதியில் முழங்கால் அளவிற்கு தேங்கியது. ஒவ்வொரு ஆண்டும் அதிக மழை பெய்யும் போது, கோவிலுக்குள் மழை நீர் தேங்குவது தொடர்கதையாக உள்ளன. நீண்ட காலமாக உள்ள இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மழை நீர் வடிகாலை துார்வார வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar