Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ராமர் கோவிலில் வால்மீகி ... திருப்பதியில் அக்., 20ம் தேதி தீபாவளி ஆஸ்தானம்; ஊஞ்சல் சேவை, அர்ஜித சேவை ரத்து திருப்பதியில் அக்., 20ம் தேதி தீபாவளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை கூடலழகர் கோவிலில் ஐந்து கருடசேவை; பெருமாள், தாயாருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
மதுரை கூடலழகர் கோவிலில் ஐந்து கருடசேவை; பெருமாள், தாயாருக்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

07 அக்
2025
04:10

மதுரை; மதுரை, கூடலழகர் கோவிலில் புரட்டாசி பௌர்ணமியை  முன்னிட்டு பாலாபிஷேக கட்டளை சார்பாக பால்குடங்கள் எடுத்துவரப்பட்டு, பெருமாள் மற்றும் தாயார்களுக்கு சிறப்பு அபிஷேகம்  நடைபெற்றது. 


108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றானதும், ஆழ்வர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமுமான மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசிமாதம் பெளர்ணமியன்று நடைபெறும் சிறப்பு பெற்ற விழாவான ஐந்து கருடசேவை இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. சில கோயில்களில் ஐந்துக்கும் அதிகமான கருடசேவைகள் ஒருநாளில் நிகழ்த்தினாலும் புரட்டாசி பௌர்ணமிக்கு கருடசேவை மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மட்டும் நிகழ்த்தப்படுவது தனிச்சிறப்பு. இவ்விழாவானது இன்று மாலை 7 மணிக்கு கூடலழகர் கோவில் முன்புறம் ஐந்து கருட சேவை ஆனது நிகழ இருக்கிறது. முன்னதாக இன்று பாலாபிஷேக கட்டளை சார்பாக பால்குடங்கள் எடுத்துவரப்பட்டு, பெருமாள் மற்றும் தாயார்களுக்கு அபிஷேகம் சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று இதில் கூடல் நகர் திருக்கோவிலிலிருந்து கருட வாகனத்தில் இரண்டு உற்சவர்களும், வீரராகவ பெருமாள் திருக்கோவிலிலிருந்து இரண்டு உற்சவர்கள் கருட வாகனத்திலும், மேலும் மதனகோபால சுவாமி திருக்கோவிலிலிருந்து கருட வாகனத்தில் ஒரு உற்சவரும் இரவு அருள்பாலிக்க உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar