Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூரப்பனுக்கு சந்தன அபிஷேகம்! உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்! உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் பக்தர்கள் அவதி: குற்றச்சாட்டு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 டிச
2012
10:12

ஐதராபாத்: திருமலையில், வைகுண்ட ஏகாதசி, துவாதசி நாட்களில், சொர்க்கவாசல் தரிசனம் கிடைக்காமல், குழந்தைகள் முதல் முதியோர் வரை, 60 ஆயிரம் பேர் அவதிக்கு உள்ளாயினர். திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், வி.ஐ.பி.,க்களுக்கு, அதிக பாஸ்களை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து, விசாரணை நடத்த வேண்டுமென, தெலுங்கு தேசம் கட்சி கோரியுள்ளது.வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், வி.ஐ.பி.,களுக்கு முன்னுரிமை கொடுத்தது. மூன்று நாட்கள் வழங்கிய தரிசன டிக்கெட் வினியோகத்தில், பல குளறுபடிகள் நடந்துள்ளது. இதன் மீது, நீதி விசாரணை நடத்த வேண்டும் என, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த, "மாஜி அமைச்சர்களான நகரி எம்.எல்.ஏ., முத்துகிருஷ்ணம நாயுடுவும், காளஹஸ்தி எம்.எல்.ஏ., கோபாலகிருஷ்ணா ரெட்டியும் மாநில அரசுக்கு, கோரிக்கை விடுத்துள்ளனர். இருவரும், ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனத்தை முன்னிட்டு, திருமலை தேவஸ்தான போர்டின் சேர்மன், நிர்வாக அதிகாரி மற்றும் அதிகாரிகள், ஆயிரக்கணக்கில் பாஸ்களை வழங்கினர். இதனால், ஏழை, நடுத்தர பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்தனர்.சாமி தரிசனம் செய்வதற்கு, திருமலையில் மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், பலரும் சாமி தரிசனம் செய்யாமலே ஊருக்கு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.வசதி குறைவான ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பக்தர்கள் திருமலையில் வெங்கடேச பெருமாளை தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலை, இதற்கு முன் ஏற்பட்டது இல்லை. இது குறித்து, விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. மூலவர் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று  நம்பெருமாள் சிவப்பு நிற ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar