குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2025 05:10
காரைக்குடி; கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.
கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹாரம் நடந்தது. கடந்த அக்.22ம் தேதி கந்தசஷ்டி விழா துவங்கியது. 6ம் நாள் நிகழ்ச்சியான இன்று மலையில் இருந்து அடிவாரத்திற்கு வேல் கொண்டு வரப்பட்டு, மாலை 4 மணிக்கு பார்வதி தேவியிடம் "வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து சுவாமி மாலை 5 மணிக்கு வெள்ளி ரதத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் முன்னிலையில் சூரசம்ஹாரம் நடந்தது. நாளை மாலை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு மேல் வள்ளி, தெய்வானையுடன் சண்முகநாத பெருமான் தங்க ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.