திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவில் திருக்குளம் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பருவமழை காரணமாக, குளம் நிரம்பிய நிலையில், கோவிலின் ஐதீக முறைப்படி கங்கை பூஜை செய்யப்பட்டது. இன்று காலை 9:00 மணிக்கு பூஜை துவங்கியது. இதில், பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், இளநீர், விபூதி கொண்டு சுவர்ண அபிஷேகம் செய்யப்பட்டது. பின், தாம்பூலத்தில் புடவை, வெற்றிலை, பாக்கு, பழம், பூ வைத்து திருக்குளத்தில் விடப்பட்டு பூஜை நிறைவு பெற்றது. இந்த பூஜையை காண்போருக்கு, கங்கைக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த பூஜையில், திருவாலங்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திருத்தணி நாராயணன் ஐந்தாம் படைவீடு திருத்தணியில் சுப்பிரமணி சாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு காவடி மண்டபத்தில் ஆறுமுகசாமி பள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.