Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் கோவில்களில் சூரசம்ஹார ... கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி சிறப்பு பூஜை கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் கந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாத் பூஜை: கடும் விரதத்துடன் கோவையில் பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
சாத் பூஜை: கடும் விரதத்துடன் கோவையில் பெண்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

28 அக்
2025
11:10

 கோவை; சாத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு, கோவை வாழ் பீகார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.


பீகார், கிழக்கு உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில், சாத் பூஜை ஆண்டுதோறும், தீபாவளிக்கு பின், ஆறாவது நாளில் துவங்குகிறது. தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்கும் இந்த வழிபாட்டில், தண்ணீர் கூட அருந்தாமல், பக்தர்கள் விரதம் இருப்பர்.அவ்வகையில், கோவையில் வசிக்கும், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள், சாத் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டனர். கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இதில் பங்கேற்று, சூரியனை வழிபட்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் க;றியதாவது; சூரியனுக்கு நன்றி தெரிவிக்கவும், குடும்பத்தினர் நலமாக வாழ வேண்டியும், வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்ய வரங்களை கேட்கவும், இந்த சாத் பூஜையை கொண்டாடுகிறோம். தீபாவளி கடந்து ஆறு நாட்களுக்கு பின், இந்த பண்டிகை துவங்கி கொண்டாடப்படுகிறது.பெண்கள் அதிகாலை புனித நீராடி, விரதம் இருந்து, தண்ணீரில் நின்று சூரியனை வழிபட்டோம். அதன்பின், சூரிய பகவானுக்கு, அர்க்கியம் என்ற படையல் வைத்து, நிறைவு செய்வோம் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு ... மேலும்
 
temple news
புதுடில்லி; சாத் பூஜை என்பது சூரியக் கடவுளுக்கு நன்றி சொல்ல நடத்தப்படும் விழாவாகும். வடமாநிலங்களில் ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வந்த கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழா, நேற்று புஷ்பாஞ்சலியுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ... மேலும்
 
temple news
திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் அஜித்குமார் சுவாமி தரிசனம் செய்தார்.தமிழ் சினிமாவின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar