Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூன்று தலைமுறைகளாக சூரர் வாகனங்களை ... மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருக்கல்யாண உற்சவம் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்கள் சூழ்ந்த மாதப்பூரில் சூரனை வதம் செய்த முத்துக்குமார சுவாமி!
எழுத்தின் அளவு:
பக்தர்கள் சூழ்ந்த மாதப்பூரில் சூரனை வதம் செய்த முத்துக்குமார சுவாமி!

பதிவு செய்த நாள்

28 அக்
2025
12:10

பல்லடம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ, மாதப்பூர் முத்துக்குமாரசாமி சூரனை வதம் செய்யும் நிகழ்வு கோலாகலமாக நடந்தது.


பல்லடத்தை அடுத்த, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரஸம்ஹார விழா கொண்டாடப்பட்டது. அக்., 22 அன்று விநாயகர் வேள்வி, அபிஷேக அலங்கார பூஜைகள் ஆகியவற்றுடன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி கந்த சஷ்டி விரதத்தை துவக்கினர். தொடர்ந்து நடந்த வேல்மாறல் பாராயணம், கந்த சஷ்டி பாராயணம், முத்துக்குமாரசுவாமி லட்சார்ச்சனை ஆகியவற்றில் பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். நேற்று, கந்த சஷ்டியை முன்னிட்டு, சூரனை வதம் செய்யும் நிகழ்வு, மாலை, 7.00 மணிக்கு துவங்கியது. வண்ண விளக்குகள், வானவேடிக்கைகள் என, மாதப்பூர் முத்துக்குமார சுவாமிமலை, விழாக்கோலத்தில் ஜொலித்தது. மயில்வாகனத்தில் முத்துக்குமார சுவாமி எழுந்தருளி, மரகதாம்பிகை தாயாரிடம் ‌வேல் பெற்றுக்கொண்டார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ, சூரனை வதம் செய்தார். சிறப்பு அலங்காரத்தில், வள்ளி தெய்வானை சமேதராக, முத்துக்குமாரசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தி ராம ஜென்மபூமி கோவில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. பக்தர்களுக்காக சிறப்பு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் கோயிலில் கந்த சஷ்டி விழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சுவாமி சிலைகள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், கந்தசஷ்டி பெருவிழாவின் இறுதி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், ஆறுமுக சுவாமி பாலாபிஷேக உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar