Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்னூர் சிவசுப்ரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் கந்த சஷ்டி திருக்கல்யாணம்; சண்முகருக்கு 16 வகை அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பழநியில் கந்த சஷ்டி திருக்கல்யாணம்; சண்முகருக்கு 16 வகை அபிஷேகம்

பதிவு செய்த நாள்

28 அக்
2025
03:10

பழநி; பழநி, கோயிலில் கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.


பழநி கோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா அக்.22., துவங்கியது. கந்த சஷ்டி திருவிழாவில் அக்.27., கோவிலில் மலைக்கொழுந்து அம்மனிடம் வேல்வாங்குதல் நடைபெற்று, பராசக்தி வேல் மலையிலிருந்து இறங்கி நான்கு கிரி வீதியில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. வெற்றி விழாவிற்கு பின் கோயிலில் இரவு சம்ரோட்சன பூஜைக்கு பின் அர்த்தஜாம பூஜை நடைபெற்றது. இன்று (அக்.28.,ல்) கோயிலில் திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி, தெய்வானை, சண்முகருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. அமிர்தலிங்கம்குருக்கள், செல்வசுப்ரமணியம் குழுவினர் யாக குண்டத்தில் வைக்கப்பட்ட கலசங்களில் உள்ள புனித நீரில் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க காலை 10:50 மணிக்கு சண்முகர்,வள்ளி, தேய்வானைக்கு மாங்கல்யதாரணம், செய்து திருக்கல்யாணம் நடந்தது. 


திருக்கல்யாண உற்ஸவம், திரளாக கலந்து கொண்ட பக்தர்களின் அரோகரா கோசத்துடன் நடை பெற்றது. மலர் மாலை மாற்றுதல் நடைபெற்றது திருமணகோலத்தில் சண்முகர்,வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பழநி கோயிலில் வெளிப்பிரகார பகுதியில் சண்முகர், வள்ளி தெய்வானை புறப்பாடு நடைபெற்றது. திருக்கல்யாணத்திற்கு பின் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. மாலை பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி, தேய்வானை, முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. அதன்பின் சுவாமி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். நிகழ்ச்சியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, பழநி கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன் மற்றும் அறங்காவலர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
அவிநாசி; திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோவிலில் கந்த சஷ்டி நிறைவு விழாவான திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாநிறைவாக சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், இன்று திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar