சிவகங்கை பிள்ளையார்பட்டி சிறுகூடல்பட்டியில் மலையரசி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் கருவறை மேலுள்ள விமானம் வைக்கோலால் வேயப்பட்டது!இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத பவுர்ணமியையொட்டி நடைபெறும் திருவிழா பிரசித்தமானது. பவுர்ணமியின்போது புதுப் பானையில் பானகம் கரைத்து, அதில் தென்னம்பாளையை இட்டு வைத்து.... மூன்று நாட்கள் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். அந்த மூன்று நாட்களும் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் வேறு ஊர்களில் தங்கமாட்டார்கள். இரவுக்குள் சொந்த ஊருக்குத் திரும்பிவிடுவார்களாம்!