Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராதா கல்யாண மஹோத்சவம் துவக்கம் திருப்பதியில் கைசிக துவாதசி ஆஸ்தானம்: கருவறையில் இருந்து வெளியே வந்த சீனிவாசமூா்த்தி ! திருப்பதியில் கைசிக துவாதசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளழகர் கோயிலில் நுாபுர கங்கையில் நீராடிய சுந்தரராஜ பெருமாள்
எழுத்தின் அளவு:
கள்ளழகர் கோயிலில் நுாபுர கங்கையில் நீராடிய சுந்தரராஜ பெருமாள்

பதிவு செய்த நாள்

03 நவ
2025
10:11

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு மலைமீதுள்ள நுாபுர கங்கை தீர்த்தத்தில் சுந்தரராஜ பெருமாள் புனித நீராடினார்.


ஐப்பசியில் 3 நாட்கள் நடைபெறும் தைலக்காப்புத் திருவிழா, அக். 31ல் துவங்கியது. கோயில் வளாகத்தில் உள்ள மேட்டுக் கிருஷ்ணன் சன்னதியில் முதல் நாள் பரமபதநாதன் அலங்காரத்திலும், 2ம் நாள் சேஷ வாகனத்திலும் சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மூன்றாம் நாளான நேற்று காலை 6:45 மணிக்கு மேல், சுந்தரராஜ பெருமாள் பூப்பல்லக்கில் சகல பரிவாரங்களுடன் மலைப்பாதை வழியாக அழகர்மலைக்கு புறப்பட்டார். வழியில் உள்ள அனுமார், கருட தீர்த்த இடங்களில் சுவாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின் ராக்காயி அம்மன் கோயிலில் உள்ள மாதவி மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். அங்கு காலை 10:35 மணிக்கு மேல் பெருமாளுக்கு தைலம் சாத்தப் பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின் நுாபுர கங்கை தீர்த்தத்தில் புனித நீராட வைத்து திருமஞ்சனம் நடந்தது. விசேஷஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலையில் இருப்பிடம் சேர்ந்தார். அழகர்மலை மீதுள்ள நுாபுர கங்கையில் ஆண்டுக்கு ஒருமுறை சுவாமி நீராடுவதைக் காண அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழா இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் ஏராளமான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டின் குரு ஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட சைவத் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  திருவண்ணாமலை: ஜவ்வாதுமலை, கோவிலுார் மலை கிராமத்தில், மூன்றாம் ராஜராஜசோழன் காலத்தில் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் அருகே ஏரிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சுவாமி சிலையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar