Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை சீசன் துவங்குவதற்கு முன்பே குமுளி மலைப் பாதையில் துவங்கியது நெரிசல்
எழுத்தின் அளவு:
சபரிமலை சீசன் துவங்குவதற்கு முன்பே குமுளி மலைப் பாதையில் துவங்கியது நெரிசல்

பதிவு செய்த நாள்

10 நவ
2025
12:11

கூடலுார்; சபரிமலை சீசன் துவங்குவதற்கு முன்பே குமுளி மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ரோடு விரிசல் ஏற்பட்ட பகுதியில் விரைந்து சீரமைப்பு பணிகளை முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


சபரிமலையில் மண்டல பூஜைக்காக நவ.16ல் நடை திறக்கப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்கு செல்வார்கள். தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்களின் வாகனங்கள் குமுளி மலைப் பாதையை கடந்து செல்லும். லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாகும். தமிழக கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இருப்பதால் வாகனப் போக்குவரத்து அதிகம்.


மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவு அருகே சமீபத்தில் ரோடு விரிசல் ஏற்பட்டு மண் சரிவு ஏற்படும் அபாயம் இருந்தது. இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் மணல் மூடைகள் அடுக்கி தற்காலிகமாக சீரமைத்தனர். இருந்தபோதிலும் அப்பகுதியில் ஒரு வாகனம் மட்டுமே கடந்து செல்லும் வகையில் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தது. சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் அதிகமாக வரும் நிலையில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க அப்பகுதியில் நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சீரமைப்பு பணிக்காக மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான வளைவில் ஒரு வாகன மட்டுமே செல்லக்கூடிய வகையில் இருப்பதால் நெரிசல் ஏற்படத் துவங்கியுள்ளது. சில அரசு பஸ்கள் ஏற முடியாமல் திணறி நின்று விடுவதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாமல் நெரிசல் ஏற்பட்டுள்ளது. விரைவாக அப்பகுதியில் சீரமைப்பு பணிகளை முடித்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஐயப்ப பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
முருகனை வழிபட உகந்த நாட்களில் சஷ்டி விரதம் முக்கியமானதாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வாராஹி மந்திராலயத்தில் தேய்பிறை பஞ்சமி திதியொட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar