Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாவை வீடியோ-புதிய பகுதி!! கோவில்களில் பாவை விழா நடத்துவதில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கிரி கோவிலுக்கு பாத யாத்திரை ஏற்பாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2013
11:01

புதுச்சேரி: லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில், சிங்கிரி கோவிலுக்குப் புனித பாத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்மிக வழிபாட்டு மன்ற தலைவர் இளங்கோ அளித்த பேட்டி:லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில், ஆண்டு தோறும், ஜனவரி முதல் ஞாயிற்றுக்கிழமை சிங்கிரிகோவிலுக்குப் பாதயாத்திரை நடத்தப்படுகிறது. அதன்படி வரும் 6ம் தேதி காலை 6 மணிக்கு திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் தலைமையில், காந்தி வீதி வரதராஜப் பெருமாள் கோவிலில் புறப்படும் பாதயாத்திரை, கடலூர் சாலை, அபிஷேகப்பாக்கம் வழியாக சிங்கிரிகோவிலை சென்றடைகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட பஜனை குழுவினர், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். முடிவில் சிங்கிரிகோவில் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது.கோவில் வளாகத்தில், காலை 10 மணிக்கு, சொற்பொழிவு, திவ்ய நாம பஜனை, பிருந்தாவன பஜனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஜீயர் சுவாமிகள் தலைமை தாங்குகிறார். திண்டிவனம் நம்மாழ்வார் சபை சொற்பொழிவாளர் ஆஷா, "புரந்தரதாசர் சரித்தரம் என்ற தலைப்பிலும், டாக்டர் ஜோசப், "சிறுவனுக்கு அருளிய சிங்கம் என்ற தலைப்பிலும் பேசுகின்றனர். சரண்யாவின் பக்தி இசை நிகழ்ச்சி, ஜெகதீசன் குழுவினரின் பக்தி இசைக் கச்சேரி நடக்கிறது.இவ்வாறு இளங்கோவன் கூறினார். வழிபாட்டு மன்ற கவுரவத் தலைவர் பக்தவச்சலம், துணைத் தலைவர் ராமமூர்த்தி, செயலாளர்கள் சுப்ரமணியன், நம்பிராஜன், பொருளா ளர் வாசுதேவன், பக்தகோலாகலன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar