Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீர ஆஞ்சநேயர் கோயிலில் சனிக்கிழமை ... பரமக்குடி பெருமாள் கோயில்களில் பாஞ்சராத்ர தீப விழா பரமக்குடி பெருமாள் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற திருப்பரங்குன்றம் கிராம சபை மனு
எழுத்தின் அளவு:
தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற திருப்பரங்குன்றம் கிராம சபை மனு

பதிவு செய்த நாள்

06 டிச
2025
05:12

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை கொடுத்த உத்தரவினை அமல்படுத்த கோரி திருப்பரங்குன்றம் கிராம சபை, திருப்பரங்குன்றம் பூர்வீக மிராஸ் வகையறாக்கள் சார்பில் கோயில் நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டது.


மனுவில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது: திருப்பரங்குன்றம் கிராம பூர்வீக குடிமக்களாகிய நாங்கள் மன்னர் திருமலை நாயக்கர் காலம் தொட்டு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு திருப்பணி செய்து வருகிறோம். அதற்கான பூர்வீக மரியாதையும் இந்நாள்வரை பெற்று வருகிறோம். எங்கள் முன்னோர்கள் வழிபட்ட மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மலை உச்சியில் தீபம் ஏற்றுவதால் எந்த ஒரு பிரச்னையும் வரப்போவதில்லை. எனவே கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று எங்கள் முன்னோர்கள் வழிபட்ட பாரம்பரிய தீபத்தூணில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றி பிரச்னைக்கு நிரந்தரக்கு தீர்வு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். தீப தூணில் தீபம் ஏற்றுவதில் அறநிலையத்துறைக்கு சிரமம் என நினைத்தால், ஆண்டுதோறும் நடைபெறுகின்ற மலை மேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழாவை கிராம மரியாதைக்காரர்களாகிய நாங்கள் சிறப்பாக நடத்தி வருகிறோம் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்தால் கிராம பூர்வீக மிராசுகள் தீபம் ஏற்ற தயாராக உள்ளோம் என தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar