ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி மேற்கு ஓடை தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உட்பட பலவகை அபிஷேகங்கள் மலர் அலங்காரம் செய்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.