Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி அதிகாலை பஜனை: காரமடையில் ... புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » செய்திகள்
தான் அழிந்தாலும் பிறரை வாழ்விப்பவன் உத்தமன்; ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
எழுத்தின் அளவு:
தான் அழிந்தாலும் பிறரை வாழ்விப்பவன் உத்தமன்;  ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்

பதிவு செய்த நாள்

18 டிச
2025
05:12

புதுச்சேரி:  திருப்பாவையின் ஒவ்வொரு பத்து பாசுரங்களிலும் ஒரு பாசுரத்தில் என்று மூன்று இடங்களில் த்ரிவிக்ரம அவதாரத்தை ஆண்டாள் அனுபவித்துள்ளாள் என, ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம் செய்தார்.


முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பாவை உபன்யாசத்தில், மூன்றாம் நாளான நேற்று அவர், பேசியதாவது; திருப்பாவையின் மூன்றாம் பாடல் பரம பவித்ரமானது. இந்த பாசுரத்தில் மந்திர மந்த்ரார்த்தம், அர்ச்சையின் பெருமை, அவதாரத்தின் பெருமை ஆகியவற்றை விளக்குவதோடு லோக ேஷமமும் என அனைத்தும் போற்றப்படுகிறது. முதல் பாசுரத்தில் பரமபதநாதனான ஸ்ரீமந்நாராயணனையும், 2ம் பாசுரத்தில் பாற்கடலில் பையத்துயின்ற பரந்தாமனான வியூக மூர்த்தியையும் பாடிக் கொண்டாடிய ஆண்டாள், 3ம் பாசுரத்தில் ஓங்கி உலகளந்து உத்தமன் ஆன விபவ மூர்த்தியான த்ரிவிக்ரமப் பெருமாளைக் கொண்டாடுகிறாள். வாமனனாய் வந்த பகவான், மஹாபலியிடம் மூன்று அடி மண் யாசித்து, த்ரிவிக்ரமனாக ஓங்கி வளர்ந்த வைபவத்தைச் சொல்லும் வண்ணம் ஆண்டாளும் மூன்றாவது பாசுரமாக வாமனாவதரத்தை அமைத்தது மட்டுமின்றி, திருப்பாவையின் ஒவ்வொரு பத்து பாசுரங்களிலும் ஒரு பாசுரத்தில் என்று மூன்று இடங்களில் த்ரிவிக்ரம அவதாரத்தை அனுபவித்துள்ளாள். பிறரை அழித்துத் தான் வாழ்பவன் அதமன். பிறரும் வாழத் தானும் வாழ்பவன் மத்யமன். தான் அழிந்தாலும் பிறரை வாழ்விப்பவன் உத்தமன். தனக்கென்று வாழாமல் பரோபகாரியாக இருப்பவன் உத்தமன். இந்த நோக்கில், தான் அழிந்தாலும், பிறரை வாழ்விப்பவன் உத்தமன் என்றபடி பகவான் தான் குறு வடிவம் தாங்கி மாபலியிடம் இருந்து, மூவடி மண் பெற்று, த்ரிவிக்ரமனாய் வளர்ந்து மாவலியின் அகந்தையை அழித்து ஆட்கொண்டதால் இங்கு வாமனன் உத்தமன் ஆனான். இவ்வாறு அவர், உபன்யாசம் செய்தார். உபன்யாசம் நேரம்  மார்கழி மாகோற்சவ உபன்யாசம் வரும் 14ம் தேதி வரை தினமும் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை உபன்யாசம் நடக்கிறது.

 
மேலும் செய்திகள் »
temple news
திட்டக்குடி: மார்கழி மாதத்தையொட்டி, திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், ஆண்டாள் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 21 ... மேலும்
 
temple news
சென்னை; மார்கழி உத்சவத்தையொட்டி, விஸ் வாஸ்" அமைப்பு சார்பில், விஷ்ணு சஹஸ்ரநாமம் கற்றல் முகாம். தி.நகரில் ... மேலும்
 
temple news
காரமடை: மார்கழி மாதம் தொடங்கியது. காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் நான்கு ரத வீதிகளில் அதிகாலையில் ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் பெருந்தேவி தாயார் சமேத நித்யகல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி 2ம் நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar