Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் மகா ... திருக்கோவிலூர் ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா திருக்கோவிலூர் ஆஞ்சநேயர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சியில் மூன்று நாட்கள் நடைபெறும் திருமுறை திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
காஞ்சியில் மூன்று நாட்கள் நடைபெறும் திருமுறை திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

20 டிச
2025
08:12

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள சித்தீஸ்வரர் மஹால் மற்றும் பச்சையப்பாஸ் சில்க்ஸ் வளாகத்தில் மூன்று நாட்கள் நடைபெறும், திருமுறை திருவிழா துவங்கியது.


நிகழ்ச்சிகள் ஆதீனங்கள் ஆசி வழங்கும் நிகழ்வு, பட்டிமன்றம், ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதருக்கு திருக்கல்யாணம், 508 சிவாச்சாரியார்கள் பங்கேற்கும் சிவபூஜை உள்ளிட்டவை நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று, சத்தியா பச்சையப்பன், சிந்துஜா முருகேஷ், இந்துமதி மேகநாதன், தேவகி வேணுகோபால், சாந்தி செல்வம் ஆகியோர் விழாவை துவக்கி வைத்தனர். விழா தலைமை நிர்வாகி பச்சையப்பாஸ் சில்க்ஸ் தலைவர் பிரபு வரவேற்றார். காஞ்சிபுரம் துளுவ வேளாளர் சங்க தலைவர் சிங்காரம், காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சங்க தலைவர் டாக்டர் தில்லை பாஸ்கர், காஞ்சிபுரம் மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்க தலைவர் பெருமாள். காஞ்சிபுரம் நகர செங்குந்தர் மகாஜன சங்க தலைவர் சிவகுரு, காஞ்சிபுரம் தொண்டை மண்டல வேளாளர் சங்க தலைவர் குமரேசன், திருத்தணி தொண்டை மண்டல வேளாளர் சங்க தலைவர் ஜானகிராமன், அனைத்து முதலியார் சங்க தலைவர் எழிலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழா ஒருங்கிணைப்பாளர் முருகேஷ், சம்பத் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.


காலை 11:00 மணிக்கு மணமாலை நிகழ்ச்சி நடந்தது. மதியம் 1:00 மணிக்கு தேவகோட்டை ராமநாதன், நடுவராக பங்கேற்ற, நகைச்சுவை பட்டிமன்றம் நடந்தது. இன்றும், நாளையும் இரண்டாம் நாள் விழாவான இன்று வேல்ஸ் பல்கலை வேந்தர் ஐசரி கணேஷ், லைப் கேர் ஆஸ்பிட்டல் நிறுவனர் ராஜ்குமார் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். மாலை 3:00 மணிக்கு நடக்கும், ஆதீனங்களின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு தருமை ஆதீனம் தலைமை வகிக்கிறார். காஞ்சி தொண்டை மண்டல ஆதீனம், செங்கோல் ஆதீனம், துழாவூர் ஆதீனம், திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்து அதிபர், பேரூர் ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்களின் ஆசியுரை, ஆன்றோர், சான்றோருக்கு பாராட்டுரை நடைபெறுகிறது. மாலை 4:00 மணிக்கு அருணை பாலறாவாயனுக்கு வேளாளர் குல மாணிக்கம் சைவ சித்தாந்தம் என்ற உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. நிறைவு நாளான நாளை காலை 5:00 மணிக்கு தீட்சை பெற்ற 508 சிவாச்சாரியார்கள் பங்கேற்று சிவபூஜை செய்கின்றனர். 6:00 மணிக்கு ஓதுவார்கள் மூலம், திருமுறை பேழை வழிபாடும், 7:00 மணிக்கு ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதருக்கு திருக்கல்யாண உத்சவம் துவங்குகிறது. திருக்கல்யாண உத்சவத்தை தமிழ் புலவர் கு.ஞானசம்மந்தம் தொகுத்து வழங்குகிறார். விழாவில், காஞ்சிபுரம் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கந்தபரம்பரை நாச்சியார் கோவில் ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம் ஆசியுரை வழங்குகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar