Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலைக்கு கர்நாடக பக்தர்கள் பாத ... சபரிமலையில் அலைமோதும் பக்தர் கூட்டம்; நாளையும் நாளை மறுநாளும் கட்டுப்பாடுகள் சபரிமலையில் அலைமோதும் பக்தர் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் கற்பூர ஆழி பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் கற்பூர ஆழி பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

25 டிச
2025
10:12

சபரிமலை; சபரிமலையில் கடந்த இரண்டு நாட்களாக மாலையில் நடைபெற்ற கற்பூர ஆழி பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


சபரிமலையில் மண்டல பூஜைக்கு முன்னோடியாக நடைபெறும் முக்கிய சடங்குகளில் ஒன்று கற்பூர ஆழி பூஜை. மாலையில் தீபாராதனைக்கு பின்னர் மேளதாளம் முழங்க கற்பூர ஆழி பவனி புறப்படும். வட்ட வடிவமான பாத்திரத்தில் கற்பூரத்தை ஏற்றி அதை அங்கும் இங்குமாக அசைக்கும் போது கற்பூர ஜோதி ஆகாயத்தை நோக்கி எழுந்து செல்லும். இது கற்பூர ஆழிபவனி என்று அழைக்கப்படுகிறது. நேற்று முன்தினம் மாலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஊழியர்கள் சார்பிலும், நேற்று போலீஸ் துறை சார்பிலும் கற்பூர ஆழி பவனி நடைபெற்றது. நேற்று மாலை தீபாராதனைக்கு பின்னர் தந்திரி மகேஷ் மோகனரரு கற்பூரம் ஏற்றி பவனியை தொடங்கி வைத்தார். இதை இரண்டு ஊழியர்கள் முன்னும் பின்னுமாக அசைத்து செல்லும்போது கற்பூர தீபம் வானை நோக்கி எழுந்து சென்றது. சிவன், பார்வதி, விஷ்ணு, நாரதர், தேவி, கணபதி, முருகன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்தவர்கள் ஊர்வலத்தின் முன் வர , புலி மேல் அமர்ந்துள்ள ஐயப்பனை வாகனமாக பக்தர்கள் சுமந்து வந்தனர். சன்னிதானத்தில் தொடங்கிய இந்த பவனி மாளிகைப்புறம் கோயிலுக்கு சென்று பின்னர் கோயிலை வலம் வந்து 18 படிகள் முன்னால் நிறைவுபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சரண கோஷம் முழக்கியபடி கலந்து கொண்டனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
மூணாறு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சத்திரம், புல்மேடு காட்டுப்பாதையில் மண்டல காலத்தில் ஒரு ... மேலும்
 
temple news
சபரிமலை; மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை (டிச., 30) மாலை திறக்கப்படுகிறது. டிச., 31 அதிகாலை முதல் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மண்டல பூஜை நடைபெற்றது. தங்க அங்கி அணிந்து அருள்பாலித்த ஐயப்பனை ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று மாலை தங்க அங்கி அணிவித்து நடந்த தீபாராதனையை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் நாளை நடைபெறும் மண்டல பூஜைக்காக தங்க அங்கி இன்று வருகிறது. இதையொட்டி நிலக்கல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar