Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொடர் விடுமுறை : ராமேஸ்வரம் கோயிலில் ...  சுசீந்திரம் தாணுமாலையன் கோயில் மார்கழி திருவிழா துவங்கியது சுசீந்திரம் தாணுமாலையன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இடைக்காட்டூர் சர்ச்சில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
இடைக்காட்டூர் சர்ச்சில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

25 டிச
2025
06:12

மானாமதுரை; மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இடைக்காட்டூரில் உள்ள புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு 11:00 மணிக்கு நடைபெற்ற சிறப்பு திருப்பலிக்கு கொல்கத்தாவில் உள்ள அமல மரிய மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜேம்ஸ் மைக்கேல் தலைமை தாங்கினார். திருத்தல அருள் பணியாளர் ஜான் வசந்தகுமார் முன்னிலை வகித்தார். திருச்சி தூய வளனார் கல்லூரி பங்குத்தந்தை ஆரோக்கியசாமி, சென்னை நம் வாழ்வு துணை ஆசிரியர் பிரின்ஸ் உள்ளிட்ட பங்குத் தந்தைகள் சிறப்பு திருப்பலியை நடத்தினர். மதுரை,திருச்சி, சிவகங்கை,விருதுநகர்,ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் திருப்பலியில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இரவு 12:00 மணிக்கு இயேசு பிறப்பு செய்தி வாசிக்கப்பட்டு இயேசு பிறப்பை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த குடில் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் ஆறத் தழுவிக் கொண்டு கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பின்னர் சர்ச் வளாகத்தில் மானாமதுரை போலீஸ் டி.எஸ்.பி., பார்த்திபன் மற்றும் ஏராளமான பங்குத்தந்தைகள் கிறிஸ்தவர்கள் கேக் வெட்டி விழாவை கொண்டாடினர். இதே போன்று மானாமதுரை புனித குழந்தை தெரசாள்,சவேரியார் பட்டணம், ராஜகம்பீரம் உள்ளிட்ட ஊர்களிலும் இளையான்குடி அருகே உள்ள ஏராளமான ஊர்களிலும் சர்ச்சுகளில் கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு திருப்பலிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்;  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.26 கோடி வருவாயாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
அவிநாசி: ராயம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவை ... மேலும்
 
temple news
 திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்ற மாசி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
 மேட்டுப்பாளையம்: -: வைகுண்ட ஏகாதசி மாதமான மார்கழி 30 நாட்கள், கருட தீர்த்த தெப்பக்குளத்தில் இருந்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar