செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு ரத்தின அங்கி அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2026 03:01
செஞ்சி; செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரத்தின அங்கி அலங்காரம் செய்தனர்.
செஞ்சிக் கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். தொடர்ந்து ரத்தின அங்கி அலங்காரம் செய்தனர். அதிகாலை 6 மணிக்கு மகா தீபாராதனையுடன் பொது மக்கள் சாமி தரிசனம் துவங்கியது. மாலை 6 மணி வரை நீண்ட வரிசையில் நின்று 75 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை தொடர் அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவில் வழிபாட்டுவினர், அருணாச்சலேஸ்வரர் கோவில் திருப்பணிக்குழுவினர் மற்றும் செஞ்சி நகர பொது மக்கள் செய்திருந்தனர். 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.