Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news உத்தமபாளையம்: சிவன் கோயில்களில் ... தில்லையுள் கூத்தனுக்கு திகட்டாத அபிஷேகம்! ஆருத்ரா தரிசனம்; பக்தர்கள் பரவசம் தில்லையுள் கூத்தனுக்கு திகட்டாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா அபிஷேகம் விமரிசை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா அபிஷேகம் விமரிசை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

04 ஜன
2026
12:01

திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு ஆருத்ரா அபிஷேகமும், நேற்று அதிகாலை கோபுர தரிசனமும் நடந்தது. இதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவில், சிவபெருமான் நடனமாடிய ஐந்து சபைகளில் முதற்சபையான ரத்தினசபை. ஆண்டுதோறும், ஆருத்ரா அபிஷேகம் மற்றும் கோபுர தரிசனம் விமரிசையாக நடைபெறும். அந்த வகையில், ஆருத்ரா அபிஷேகம், நேற்று முன்தினம் இரவு 9:00 மணி முதல் மறுநாள் அதிகாலை 3:00 மணி வரை, நடராஜ பெருமானுக்கு, 34 வகையான பழங்களால் அபிஷேகம் நடைபெற்றது.


தொடர்ந்து, நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் தோன்றினார். பின், கோபுர தரிசனம் நடந்தது. இதில், தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். திருவள்ளூர் திருவள்ளூர் பூங்கா நகர், சிவ விஷ்ணு கோவிலில், ஆருத்ரா முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை நடராஜருக்கு அபிஷேகம் நடந்தது.


நேற்று காலை, கோவில் வளாகத்தில் இருந்து நடராஜர், பார்வதி தாயாருடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதியுலா நடந்தது. அதேபோல், பஜார் வீதி திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில், அபிஷேகம், ஆராதனை நடந்தது.காலை 8:30 மணியளவில் ஆருத்ரா தரிசனம் நடந்தது.


திருத்தணி திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் ஆருத்ரா விழாவில், பாலமுருகருக்கு வெந்நீர் அபிஷேகம் நடைபெறுகிறது. நேற்று மூலவர் முருகப்பெருமான் பின்புறம் உள்ள பாலசுப்பிரமணியர் சன்னிதியில், விபூதி, பால், பன்னீர், இளநீர், உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு, வெந்நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.


அதேபோல், முருகன் கோவிலின் உபகோவிலான சுந்தர விநாயகர் கோவிலில், சுந்தரேசர் சன்னிதியில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு உற்சவர்கள் சிவகாமி மற்றும் சுந்தரேசர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தனர். ஊத்துக்கோட்டை ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமத்தில் சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் உள்ளது.


இக்கோவிலில், சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்ட மயக்கத்தில், அன்னை பார்வதி தேவி மடியில் தலை வைத்து உருவ ரூபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். நேற்று முன்தினம் இரவு உற்சவர் நடராஜருக்கு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று உற்சவர் நடராஜர், சிவகாமி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டைபகுதிகளில் வீதியுலா வந்தனர்.


அடிப்படை வசதியில் குறைபாடு திருவாலங்காடில் பக்தர்கள் புலம்பல்


கழிப்பறை, குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை திருவாலங்காடு கோவில் நிர்வாகம் சரிவர செய்யாததால், தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் அவதியடைந்தனர். நேற்று முன்தினம் இரவு ஆருத்ரா தரிசனம் காண, 100 மற்றும் 300 ரூபாய் டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டது. 100 ரூபாய் டிக்கெட், 8:50 மணிக்குள் தீர்ந்து விட்டதாக அறிவித்து, பின் 300 ரூபாய் டிக்கெட் மட்டுமே வினியோகிக்கப்பட்டது. ஆனால், 100 ரூபாய் தரிசனத்தில் பெரும்பாலான இடங்கள் காலியாக இருந்தன. இதனால், பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அதேபோல, காலை 10:00 மணியளவில், பக்தர்கள் அதிகளவில் வந்த போது, பெரும்பாலான போலீசார் மற்றும் கோவில் பணியாளர்கள் ஓய்வெடுக்க சென்றனர். காலை 11:00 மணியளவில் கூட்டம் அலைமோதியதால், தரிசனத்திற்கு வந்தவர்கள் நான்கு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். பாதுகாப்பு குறைபாடால் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar