Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் ... கங்காதீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் சிவனடியார்கள் பரவசம் கங்காதீஸ்வரர் கோவிலில் திருவாசகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐந்தெழுத்து மந்திரத்தின் மகத்துவம் உணர்த்தும் திருவாசகம்
எழுத்தின் அளவு:
ஐந்தெழுத்து மந்திரத்தின் மகத்துவம் உணர்த்தும் திருவாசகம்

பதிவு செய்த நாள்

28 ஜன
2026
12:01

திருப்பூர்: ‘நமசிவாய’ என்கிற ஐந்தெழுத்து மந்திரத்தை கொண்டு துவங்கும் ஒரே திருமுறை திருவாசகம் என, சைவ சித்தாந்த ஆசிரியர் சிவசண்முகம் பேசினார்.


கொங்கு மண்டல ஆடல் வல்லான் அறக்கட்டளை மற்றும் சபரி டைமண்ட்ஸ் சார்பில், திருவாசகம் பயிற்சி வகுப்பு, திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்திலுள்ள திருவருள் அரங்கில், கடந்த 20ல் துவங்கி நடைபெற்று வருகிறது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்த வகுப்பில், கோவையை சேர்ந்த சித்தாந்த பேராசிரியர் சிவ சண்முகம், திருவாசகம் குறித்து விளக்கம் அளிக்கிறார். நேற்றைய வகுப்பில், சிவசண்முகம் பேசியதாவது: மாணிக்க வாசக சுவாமிகள் அருளிய சிவபுராணமானது, சிவனது அனாதி முறைமையான பழமை. காலத்தால் அளவிட முடிகின்ற பழமை; காலத்தால் அளவிட முடியாத பழமை என இரண்டு உள்ளது.


காலம் கடந்த புராணம் என்பதாலேயே சிவபுராணம், அனாதி முறைமையான பழமை எனப்படுகிறது. பன்னிரெண்டு திருமுறைகளில் எட்டாவது திருமுறையாக அமைந்திருப்பது, திருவாசகம். ‘நமசிவாய’ என்பது சைவர்களின் தலையாய மந்திரம். எல்லா திருமுறைகளிலும், ஐந்தெழுத்து மந்திரம் ஆங்காங்கே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும், ‘நமசிவாய வாழ்க’ என, சிவனின் ஐந்தெழுத்து மந்திரத்தை கொண்டே துவங்கும் திருமுறை, திருவாசகம் மட்டும்தான். முதல் முதலாக அச்சிலேறிய திருமுறையும், திருவாசகம்தான். மாணிக்கவாசகரின் காலம், இன்று வரை ஆராய்ச்சிக்குரியதாகவே இருந்தாலும், இறைவனின் திருவருளால், அவரது நுால் நமக்கு கிடைத்திருக்கிறது. உருக்கங்கள் நிறைந்த திருவாசகம், நன்மை பயக்கும் ‘நம சிவாய’ மந்திரத்தை நமக்கு சொல்கிறது. ‘கோகழி ஆண்ட குறுமணி தன் தாள் வாழ்க’ என்றால், நம்மையெல்லாம் ஆட்கொள்ள, இறைவனே குருநாதராய் வந்து உபதேசம் செய்வார்; அதனால், நமது துன்பங்கள், அறியாமையெல்லாம் அகலும், எ று பொருள். அறியாமையை அகற்றுபவர் குருநாதர்; சிவபெருமானே குருநாதராக வந்து, இருள் அகற்றி, ஒளிவீசுமாறு செய்வார். இவ்வாறு, அவர் பேசினார். வாரந்தோறும் செவ்வாய் கிழமை, மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில், அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar