பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் வருடாபிஷேக விழா நடந்தது.
கடந்த ஆண்டு பிப்., 10 கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து மண்டல அபிஷேகம் நடந்த நிலையில் நேற்று வருடாபிஷேகம் நடந்தது.
காலை அனுக்ஞை, கோ பூஜை, 108 சங்கு பூஜை நடந்தது. பின்னர் மூல மந்திர ஹோமம் நிறை வடைந்து மதியம் மகா பூர்ணாகுதி நடந்தது.
தொடர்ந்து கடம் புறப்பாடாகி சக்தி கோஷத்துடன் முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு சங்காபிஷேகம் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் முத்தால பரமேஸ்வரி ராஜாங்க அலங்காரத்தில் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.